‛கள்ளக்காதல்’ வேறொருவருடன் மனைவி வாழ்ந்தால் பராமரிப்பு தொகை உண்டா? கர்நாடகா ஐகோர்ட் பரபர தீர்ப்பு
பெங்களூர்: மனைவி இன்னொருவருடன் உறவு வைத்து அவருடன் சேர்ந்து வாழும்போது கணவர் தரப்பில் இருந்து பராமரிப்பு தொகை வழங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த தம்பதி திருமணம் ஆகி மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கினர். இந்நிலையில் தான் அந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டுக்காரருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதுபற்றி அறிந்த கணவர் கள்ளக்காதலை கைவிடும்படி தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அதனை கண்டுக்கொள்ளவில்லை. இதையடுத்து அந்த நபர் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ தொடங்கினார். கணவரால் கைவிடப்பட்ட மனைவி தான் தொடர்பில் இருக்கும் நபருடன் சேர்ந்து வாழ தொடங்கினார்.
இந்நிலையில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 (டிவி சட்டம்) பிரிவு 12ன் கீழ் தனது வாழ்க்கைக்கான அடிப்படை செலவுகளுக்கான பராமரிப்பு தொகையை கணவரிடம் இருந்து பெற்று தர வேண்டும் என அந்த பெண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதனை விசாரித்த நீதிமன்றம் கணவர் சார்பில் மாதந்தோறும் அந்த பெண்ணுக்கு பராமரிப்பு செலவாக ரூ.1,500, வீட்டு வாடகைக்கு ரூ.1,500 மற்றும் இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து அந்த பெண்ணின் கணவர் செசன்ஸ் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதனை விசாரித்த நீதிமன்றம் கணவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதாவது பராமரிப்பு தொகையாக மனைவிக்கு வழங்க வேண்டிய பணத்தை கொடுக்க வேண்டாம் என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து செசன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனைவியான அந்த பெண்ணின் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ராஜேந்திர பதாமிகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், ‛‛மனுதாரரான மனைவி தனது கணவருக்கு உண்மையாக இல்லை. அவர் பக்கத்து வீட்டுக்காரருடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் உள்ளார். தற்போது அவருடனே வசித்து வருகிறார் என்பது ஆதாரங்கள் மூலம் தெரியவருகிறது. மனுதாரர் இன்னொருவருடன் வசிக்கும்போது அவர் பராமரிப்பு தொகை கோருவதற்கான கேள்வி என்பது எழவே எழாது.
மேலும் திருமணம் முடிந்துவிட்டது என்பதற்காகவும், மனைவி என்பதற்காகவுமே ஒருவர் பராமரிப்பு தொகை பெற தகுதியுடைவராக முடியாது'' எனக்கூறிய நீதிபதி செசன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்தார். அதோடு பராமரிப்பு தொகை கோரிய அந்த பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதுமட்டுமின்றி மனைவி தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் உறவினரின் மகளுடன் தகாத உறவில் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிமன்றம், தன்னை நேர்மையானவர் என காட்டுவதற்காக கணவர் மீது ஆதாரமின்றி குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications