அச்சம், பக்க சார்பு கூடாது-ஜெ.வுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி குன்ஹா பிரிவு உபசார விழாவில் பேச்சு
பெங்களூரு: நீதித்துறையில் பணியாற்றுகிறவர்கள் அச்சமோ, பக்கச்சார்புடனோ நடந்த்உ கொள்ள வேண்டியது இல்லை என கர்நாடகா நீதிபதி குன்ஹா தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி குன்ஹா.
கர்நாடகாவின் மங்களூருவில் 1959-ம் ஆண்டு ஏப்ரல் 7-ல் பிறந்தவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 2016-ம் ஆண்டு கர்நாடகா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஜெ., சசிகலாவுக்கு சிறை விதித்த குன்ஹா
விசாரணை நீதிமன்றத்தில் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தவர் நீதிபதி குன்ஹா. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தவரும் குன்ஹாதான்.

ஜெ. வழக்கு
நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நிறுத்தி வைத்தார். ஆனால் உச்சநீதிமன்றமோ நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை ஏற்று சிறை தண்டனையை உறுதி செய்தது. இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் போது ஜெயலலிதா மறைந்துவிட்டார். அதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் 3 பேரும் சிறை தண்டனை அனுபவித்தனர்.

பணி ஓய்வு
நீதிபதி குன்ஹா சில நாட்களுக்கு முன்னர் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் பேசிய கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சிறப்பு நீதிபதியாக இருந்து 216 கிரிமினல் வழக்குகளை மிக குறுகிய காலத்தில் விசாரித்து முடித்தவர் குன்ஹா என புகழாரம் சூட்டினார். அதேபோல் எடியூரப்பா வழக்கு, டிகே சிவகுமார் வழக்கு என பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை கொடுத்தவர் குன்ஹா.

அச்சம் தவிர்
இந்த நிகழ்ச்சியில் பேசிய குன்ஹா, 2001-ம் ஆண்டு மாவட்ட நீதிபதிகளுக்கான நியமனத்துக்காக கர்நாடகா உயர்நீதிமன்றம் எழுத்துத் தேர்வு நடத்தியது. இந்த தேர்வினால்தான் தம்மால் நீதித்துறைக்குள்ளேயே வர முடிந்தது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் குன்ஹா. மேலும் நீதிபதிகள் அச்சத்துக்கும் பக்கச்சார்புக்கும் இடம்தராமல் பணியாற்ற வேண்டும் என்றும் குன்ஹா கேட்டுக கொண்டார்.
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications