எல்லையில் பதற்றம்.. 25 நாட்கள் விடுப்பை ரத்து செய்து விட்டு ஸ்ரீநகர் புறப்பட்ட ராணுவ வீரர்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் எல்லையில் பதற்றம் நிலவி வருவதை அடுத்து உயரதிகாரியின் அழைப்பின் பேரில் 25 நாட்கள் விடுப்பை ரத்து செய்து விட்டு ஸ்ரீநகர் புறப்பட்டு சென்ற ராணுவ வீரரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய விமானியை அபிநந்தனை பிடித்து வைத்துள்ளதால் போர் மூளும் சூழல் ஏற்பட்டது. எனினும் உலக நாடுகள் அழுத்தம் கொடுத்ததால் அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதனிடையே கர்நாடக மாநிலம் கலபுர்கி பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவ் கும்பார் கில்கி. இவர் கடந்த 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

போன்
இந்த நிலையில் இவர் 25 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊரான கல்புர்கிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தார். தனது மனைவி, குழந்தையுடன் ஓரிரு நாட்களை செலவிட்டார். இந்த சூழலில் அவருடைய உயரதிகாரியிடம் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு அவருக்கு போன் வந்தது.

இன்முகம்
மறுமுனையில் பேசிய அதிகாரி, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் மூளும் சூழல் உள்ளதால் உடனடியாக ஸ்ரீநகருக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அங்கிருந்து புதன்கிழமை காலை புறப்பட்டார். அவரை அவரது மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்கள் இன்முகத்துடன் அனுப்பி வைத்தனர்.

சிறு குழந்தை
இதுகுறித்து அவரது சகோதரர் சரணு கும்பார் கூறுகையில், எனது தந்தை 32 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் தற்போது இல்லை என்றார் அவர். 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமான மகாதேவுக்கு மனைவி முனிஷாவும் 6 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளனர்.

பெருமை
இதுகுறித்து அவரது மனைவி முனிஷா கூறுகையில் போர் மூளும் அபாயம் இருப்பதால் எனது கணவரை மீண்டும் அழைத்தனர். அதிகாரி அழைத்தவுடன் தாய் மண்ணிற்கு சேவையாற்ற வேண்டும் என மகாதேவ் சென்றது பெருமையாக உள்ளது என்றார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications