என்னாது காவிரி குறுக்கே மேகதாது அணை- உச்சநீதிமன்றம் ‘அப்படி’ சொல்லிடுச்சா? டிகே சிவகுமார் பகீர்!
பெங்களூர்: மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது; காவிரி பிரச்சனையில் இன்று பந்த் நடத்த வேண்டாம் என்று அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பின்னர் துணை முதல்வர் டிகே சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைச்சரவைக் கூட்டத்தில் காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கர்நாடகா அணைகளுக்கு வினாடிக்கு 8,000 கன அடி நீர் வரத்து உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு: காவிரியில் தமிழ்நாடு அரசு முதலில் 24,000 கன அடி நீரை தர கோரியது. ஆனால் நாம் வினாடிக்கு 3,000 கன அடி நீரைத்தான் திறக்க முடியும் என்றோம். காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 10,000 கன அடிநீர் தர சொன்னது. நாம் அதனை ஏற்கவில்லை. இதனால் வினாடிக்கு 5,000 கன அடி நீராக குறைத்தனர். உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்கவும் இல்லை. கர்நாடகா வாதத்தையும் ஏற்கவில்லை. இதனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 26-ந் தேதி வரைதான் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடப்படும்.
முழு அடைப்பு வேண்டாம்: கர்நாடகா விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. ஆகையால் முழு அடைப்பு, போராட்டங்களை விவசாயிகள் கைவிட வேண்டும். முழு அடைப்பு போன்றவற்றால் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும். ஆகையால் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
மேகதாது அணை- உச்சநீதிமன்றத்தில் சாதகம்: உச்சநீதிமன்ற விசாரணையின் போது மேகதாது அணை கட்டுமான திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டுக்கு தேவையான காவிரி நீரை தர கர்நாடகா தயாராக உள்ளது; அப்படியானால் அவர்கள் எத்தனை அணைகளை வேண்டுமானால் கட்டலாமே.. உங்களுக்கு ஏன் பிரச்சனை? ஏன் எதிர்க்கிறீர்கள்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாட்டு தரப்பிடம் கேள்வி எழுப்பினர். ஆகையால் உச்சநீதிமன்றமும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சாதகமாக உள்ளது. இதனை புரிந்து கொண்டு பாஜகவினர் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணை கட்டுமானத்துக்கு தேவையான ஒப்புதல்களை பெற்றுத் தர உதவ வேண்டும்.
காவிரி அரசியல் கூடாது: கடந்த காலங்களில் பாஜக அரசு, வினாடிக்கு 10,000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டதும் உண்டு. இதில் அரசியல் செய்வதற்கு நாங்கள் விரும்பவில்லை. என்னதான் உச்சநீதிமன்றத்துக்கு போய் மேல்முறையீடு செய்தாலும் காவிரி மேலாண்மை ஆணையத்திடமே போக சொல்லும் என்கிற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். மேகதாது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளுக்கும் கர்நாடகா அரசு தயாராக உள்ளது. இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications