வீடு புகுந்த நாக பாம்பு.. 6 வயது சிறுமி செய்த பகீர் காரியம்.. பதறிய பெற்றோர்.. வைரல் வீடியோ
பெங்களூரு: திடீரென வீட்டிற்குள் வந்த நாக பாம்பை கையில் பிடித்து 6 வயது சிறுமி விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை பார்த்து பதறிப்போன பெற்றோர், பாம்பை சிறுமியிடம் இருந்து வாங்கி பத்திரமாக காட்டில் விட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Recommended Video
பெற்றோர்கள் செய்வதை பிள்ளைகள் அப்படியே செய்து பார்க்க விரும்பும் என்பதற்கு பல சம்பவங்கள் உதாரணம் என்றாலும், இந்த சம்பவம் மிகப்பெரிய உதாரணம் மட்டுமல்ல.. விபரீதமான
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை சித்தாபுற அருகிலுள்ள காவடி பகுதியை சேர்ந்தவர் ரோஷன். இவர் அவ்வப்போது சுற்றுப்புற பகுதிகளில் ஊருக்குள் வரும் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவது வழக்கம்.

குழந்தையை கூட்டி செல்வார்
அவருக்கு ஒரு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. ரோஷன் பாம்பு பிடிக்க செல்லும் போது பெரிய மகளான 6 வயது தனுஷா தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம்.

அம்மா வரவில்லை
இந்நிலையில் இன்று காலை சிறுமி தனுஷா தன் தங்கையுடன் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் இருந்து 5 அடி நீளமுள்ள நாகபாம்பு ஒன்று வந்துள்ளது. இதை பார்த்த சிறுமி கூச்சலிட்டு வீட்டில் இருந்த அம்மாவிடம் பாம்பு வந்துள்ளது வா என கூப்பிட்ட போது அவருடைய அம்மா வீட்டில் வருவதற்கு வெகுநேரம் ஆகியிருக்கிறது.

தாய் அதிர்ச்சி
யாரும் எதிர்பாராத விதமாக சிறுமி பாம்பின் அருகே சென்று பாம்பின் வாலை பிடித்து எந்த பதற்றமும், அச்சமும் இன்றி பாம்புடன் விளையாடிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு அவருடைய தாயார் வந்து பார்த்தபோது சிறுமி தனுஷா பாம்புடன் விளையாடி கொண்டிருந்தத்தை பார்த்த அதிர்ச்சி அடைந்தனர்.

வனப்பகுதி
குழந்தையிடம் இருந்து பாம்பை வாங்கி அவர்கள், நீண்ட நேரம் கழித்து அந்த பாம்பை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விட்டனர். சிறுமி நாகப்பாம்பு பிடித்து விளையாடிய சம்பவம் கர்நாடகாவின் குடகு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications