நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு அறிவாளிக்கிட்ட தோற்றால் பரவாயில்ல.. அரசியல் ஆளுமைகிட்ட தோற்றால் பரவாயில்லை. என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா ஆதங்கத்துடன் சென்னையில் பேசினார். அதேபோல் மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாவுவிடம்.. நீ எல்லாம் ஏதோ பாவம் செய்திருக்கிறாய்.. இந்த சட்டசபையில் போய் உட்கார்ந்து இருக்காய் பார்த்தாயா... அப்படி ஆகிப்போச்சு.. என்றும் ஆ ராசா ஆதங்கத்துடன் பேசினார்.

சென்னையில் நேற்று ஆ ராசா பேசுகையில், "எங்களுக்கு இருக்கும் வருத்தம் என்னவென்றால், இந்தியாவே நம்மை உற்றுப் பார்த்ததே, 'தமிழ்நாடா இது! தமிழ்நாட்டை இந்தத் தமிழ்நாடு இப்படி உயர்த்திப்பிடித்துள்ளதே' என்று நாடே மதித்துப் பார்த்த காலம் போய், நம்மை இப்படிப் பார்க்க வைக்கிறார்களே என்பதுதான்.

You have committed a sin Sekar Babu A Raja s remarks delivered directly to his face on stage

ஓர் அறிவாளியிடம் தோற்றால் பரவாயில்லை, அரசியல் ஆளுமையிடம் தோற்றால் பரவாயில்லை, ஒரு புத்திசாலியிடம் தோற்றால் பரவாயில்லை, ஒரு பொதுவாழ்வில் உழைத்தவரிடம் தோற்றால் கூடப் பரவாயில்லை. 'உள்ளபடியாக ஒரு மாற்றத்தை விரும்பித்தான் மக்கள் வாக்களித்தார்கள்' என்று சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நடந்தது வேறு..

நான் எல்லா மேடைகளிலும் சொல்வேன்; என் தாத்தா தீண்டாமைக்காகவும் வறுமைக்காகவும் இலங்கைக்கு ஓடினார். என் அப்பா ஆங்கிலம் படித்தார்; அங்கிருந்து உழைத்துப் பொருள் ஈட்டி வந்தார், சொத்து வாங்கினார். நான் அவருடைய எட்டாவது பிள்ளை. இன்று என் குடும்பத்தில் ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் , ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் மருத்துவர்கள், பொறியாளர்கள் என எல்லாரும் உருவாகிவிட்டார்கள்.

அந்த எட்டாவது பையனாகிய நான் திராவிட முன்னேற்றக் கழகம், கலைஞர், பெரியார், அண்ணா, அம்பேத்கர் வழியில் ஒன்றிய அமைச்சராகிவிட்டேன். என்மகள் லண்டனில் படிக்கிறார்.. அந்த பெண்ணுக்கு ஜாதி என்றால் என்னவென்றே தெரியாது.. எஸ்சி என்று சொன்னால் புஸ்ணுன்னு உதைவிடும்.. தாத்தா ஓடினார்.. அப்பாவிற்கு கொஞ்சம் மாற்றம் வந்தது, அப்பா வந்தார் பெரிய முன்னேற்றம் வந்தது. ராஜாவிற்கு பின்னால் புரட்சிகரமான மாற்றம் வந்துள்ளது. என் மகள் மயூரி லண்டனில் படிக்கிறார். இந்த மாற்றங்களுக்கு பின்னால் யார். இந்த இயக்கம் பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் தான்

இப்போது நீ ஒரு 'மாற்றம்' என்கிறாயே, வந்து என்ன கிழிக்கப் போகிறாய்? 'மாற்றம் மாற்றம்' என்று சொல்கிறாயே, வந்து என்ன செய்யப் போகிறீர்கள் என்றுதான் நான் கேட்கிறேன். பேசிப் பேசியே வளர்ந்த தமிழ்நாட்டு அரசியலில் பேசாமலேயே ஒருவர் முதலமைச்சர் ஆகி இருக்கிறார். அப்படியே பேசினாலும் எங்க பேசினோமா அங்கே பேசுவது இல்லை.. வெளியே வந்தால் கை கால்கள் இப்படி போகுது. (தூக்கி காட்டுகிறார் ராஜா). சட்டசபைக்குப் போனால் அமைதியாக புத்தகத்தை வைத்துக்கொண்டு பவ்யமாக பார்க்கிறார். ஒன்றும் புரியவில்லை.

சேகர்பாபு உனக்கு எல்லாம் ஏதோ ஒன்று.. சொல்றனேன்னு தப்பா நினைக்காதீங்க... விபூதி வைத்திருப்பதால் சொல்கிறேன்.. எனக்கு நம்பிக்கை இல்லை.. நீ எல்லாம் ஏதோ பாவம் செய்திருக்கிறாய்.. இந்த சட்டசபையில் போய் உட்கார்ந்து இருக்காய் பார்த்தாயா... அப்படி ஆகிப்போச்சு.. இப்பவும் ஒன்று கெட்டுப்போகவில்லை.. நம்முடைய அருள்மொழி அவர்கள் அழகாகச் சொன்னார்கள், 'திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இந்தத் தலைமுறைக்காக மட்டும் சிந்திக்கக்கூடிய இயக்கமல்ல'.. இன்னும் சொல்லப் போனால், அவரை (கலைஞர்) மாதிரி ஒரு போராளி யாராவது இருக்கிறார்காள? டெல்லியிலே கலைஞர் இருந்த போது, பிரபாகரன் இறந்துவிட்டார் என்று டிவியில் காட்டுகிறார்கள்.. நாங்கள் சொல்கிறோம், இப்பொழுது காட்டப்படுவது பழைய படமா அல்லது உண்மையானதா என்று தெரியவில்லை. நம்மால் வருத்தப்படத்தான் முடிகிறது. படத்தில் இருப்பது யார் என்று தெரியவில்லை என்றோம்..

ஆனால் பிரஸ்ஸை பார்த்து இப்போது ஓடுகிறீர்களே? சிஎம் சார்! டெல்லிக்கு முதல்வர் யார் வந்தாலும் பேட்டி கொடுப்பார்கள் சார்? டெல்லிக்கு எந்த முதலமைச்சர் போனாலும் பேட்டி கொடுப்பார்கள், அது மரபு சார். ஆங்கிலத்தில் அது ஒரு லெகசி (Legacy) சார், ப்ளீஸ் சார்.

வெளியில் 48 டிகிரி வெயிலில், கடுமையான வெயிலில், தன் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு வெறும் பனியனோடு டெல்லி வெயிலில் போனார்கள் ஒரு காலத்தில்... அந்த வெயிலிலும் தமிழ்நாட்டின் உரிமைக்காகக் கறுப்புக் கோட்டுப் போட்டுக்கொண்டு ஓடினார் விஜய் மைக்கை நீட்டினால் விஜய் ஓடுகிறார். .

அன்று கலைஞர் இருந்த காலத்தில் 2009ல் தமிழ்நாடு இல்லத்தில் அவ்வளவு இக்கட்டான சூழல் தமிழ்நாடு இல்லத்தில். ஆனால் பிரஸ்ஸை பார்க்காமல் செல்லவில்லை கலைஞர் கருணநிதி.. பிரஸ்ஸை கூப்பிட்டார்.. பிரஸ்சும் வந்தார்கள்.. பிரபாகரன் இறந்துவிட்டாரா, நெடுமாறனும் வைகோவும் இல்லை என்கிறார்களே.. எது உண்மை? இறந்துவிட்டாரா இல்லையா என்றுகேட்டார்கள். ஒரே வரிதான்; போராளிக்குச் சாவும் இல்லை என்று கலைஞர் பதில் அளித்தார். போராளிக்கும் சாவு இல்லை.. கலைஞரும் சாவும் இல்லை! அவரது கொள்கைக்கும் சாவு இல்லை...

நான் எவ்வளவோ அரசியல் பார்த்திருக்கிறேன்.. ஒரு பொய்யை இவங்களா கட்டமைச்சு அந்தப் பொய்க்கு ஒரு சுயவிளம்பரம் தேடிக்கொள்கிறார் விஜய். விஜய் பேசும் போது, நான் கோட்டு போடக்கூடாதா, சூட்டு (Suit) போடக்கூடாதா?' என்று கேட்கிறாய். உன்னை யார் போட வேண்டாம் என்று சொன்னது?

அதாவது, ஒரு குப்பனும் சுப்பனும் படித்துக்கொண்டு சூட்டுப் போட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஏன்னென்றால், என் தாத்தா கோவணம் கட்டியிருந்தார், என் அப்பா இலங்கையில் கூலி வேலைக்குச் சென்றபோது சட்டை இல்லாமல் இருந்திருப்பார். அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த நான் கோர்ட்டில் கோட்டுப் போட்டால், அதுதான் காந்தியின் வழி, அம்பேத்கரின் வழி!

'காந்தி ஏன் கோவணம் கட்டினார், அம்பேத்கர் ஏன் சூட்டுப் போட்டார்?' என்று கேட்பார்கள். அதற்கும் ஒரு கதை சொல்வார்கள். காந்தி ஒன்றும் ஏழை கிடையாது, பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்த தனவந்தராக இருந்த காந்தி, நாட்டின் வறுமையைக் கண்டு, தன் எளிமையைக் காட்டுவதற்காக ஒரு கோவணத்தோடு போனார். அது அவருடைய அரசியல் ஸ்டைல் .

ஆனால், காலம் காலமாக ஆடையில்லாமல் கோவணம் கட்டியிருந்த என் சமூகம், படித்து முன்னேறி கோட்டு அணிவது என்பது என்னுடைய ஸ்டைல், அதுதான் அம்பேத்கரின் ஸ்டைல்! அதனால்தான் சொல்கிறேன், கோவணம் கட்டியிருந்த சமூகத்தில் இருந்து வந்த ஒருத்தன் கோட்டுப் போட்டால் அதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், நீ (விஜய்) சினிமாவிலும் கோட்டுப் போட்டுக்கொண்டுதான் நடிக்கிறாய், இங்கும் வந்து 'நான் கோட்டுப் போட்டால் தப்பா, யார் என்னைப்போடக் கூடாது என்றது?' என்று நடிக்கிறாய். உன்னை யார் தடுத்தது? நன்றாகப் போட்டுக் கொள், உன்னை யாரும் கேட்கவில்லை."

"அரசியல் களத்தில் யார் பெரியவன் என்று மக்களுக்குத் தெரியும் அல்லவா? இதில் இவர்களுக்கு என்ன கொள்கை ? முட்டிப் போட்டு வருடம் முழுக்க அரசியல் நடத்துவதுதான் கொள்கையா? 'மதத்தைத் தாண்டி வாருங்கள்' என்று சொன்னால், நெற்றிக்கு ஒரு மதம், வாய்க்கு ஒரு மதம், பெயருக்கு ஒரு மதம் என்று சொல்லி, எல்லா மதத்தையும் ஒரே மதம் என்று மழுப்புகிறார்கள். இப்படி ஒரு அயோக்கியத்தனம் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

அங்கே சொன்னார்கள், 'குழந்தை சொன்னதைத்தான் தாத்தா கேட்பார்' என்று. குழந்தை சொல்லித் தாத்தா ஓட்டு போட்டார். ஆனால், இனி வருகிற குழந்தைகளாவது அப்படிச் சொல்லாமல் இருப்பது மட்டுமல்லாமல், எந்தக் குழந்தை அப்படித் தவறாகச் சொன்னதோ, அந்தச் சொல்லினை மாற்றி, வருகிற புதிய தலைமுறை அதைத் திருத்த வேண்டும். தாத்தாவின் நினைவோடு தமிழ்நாட்டில் இன்னொரு மக்கள் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். அந்தத் தாத்தாவின் கொள்கைகள் உயிரோடு இருக்கும்போதே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பங்களிப்போடு, திராவிட ஆட்சி கொண்டுவர வேண்டும்" இவ்வாறு ஆ ராசா பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+