கர்நாடகா தேர்தல்: காங், 128-131 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும்- அடித்து சொல்லும் LokPoll சர்வே
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 128 முதல் 131 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும் என LokPoll சர்வே தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளிடையேதான் பிரதான போட்டி. மூன்று கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதில் பாஜகவில்தான் கலகக் குரல் பெரிதாக வெடித்திருக்கிறது.

பாஜகவின் முன்னாள் மாநில தலைவர், மாஜி முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் என பலரும் கட்சி தலைமை மீது அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். கர்நாடகாவில் பெரும்பான்மைக்கு தேவையான 113 எம்.எல்.ஏக்களை இம்முறை பாஜக பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
கர்நாடகா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளும் கூட காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும்; ஆளும் பாஜகவுக்கு தோல்விதான் கிடைக்கும் என கூறி வருகின்றன.
கர்நாடகா தேர்தல் தொடர்பாக LokPoll நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு விவரம்: கர்நாடகாவில் காங்கிரஸுக்கு 128 முதல் 131 இடங்கள் கிடைக்கும் .அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 42% முதல் 45% வாக்குகள் கிடைக்குமாம்.

பாஜகவுக்கு 66 முதல் 69 இடங்கள் மட்டுமே கிடைக்கும்; தேர்தலில் 30% முதல் 33% வாக்குகள்தான் பாஜகவுக்கு கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு.
ஜேடிஎஸ் கட்சிக்கு 21 முதல் 25 இடங்கள் அதாவது 15% முதல் 18% வரை வாக்குகள் கிடைக்குமாம். இதர கட்சிகளுக்கு 1 முதல் 4 இடங்கள் கிடைக்கக் கூடுமாம்.












Click it and Unblock the Notifications