Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகா ஆளும் பாஜகவுக்கு நெருக்கடி- இடஒதுக்கீடு கோரி பஞ்சமசாலி லிங்காயத் சமூகம் பிரம்மாண்ட பேரணி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடி தரும் வகையில் இடஒதுக்கீடு கோரி பஞ்சமசாலி லிங்காயத்துகள் பிரம்மாண்ட பேரணி நடத்தியிருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் பாஜகவின் வாக்கு வங்கியான லிங்காயத்துகள் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்துவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் படுதீவிரமாக உள்ளன. இதில் ஜேடிஎஸ் கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையே அறிவித்தும்விட்டது.

Karnataka Assembly Election 2023: Panchamasali Lingayats hold rally for Reservation

கர்நாடகாவில் ஆளும் பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இதனை சமாளிக்கும் வகையில் அமைச்சரவையை மாற்றி அமைப்பது தொடர்பாக பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக கர்நாடகா பாஜக தலைவர்கள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பஞ்சமசாலி லிங்காயத்துகள் தங்களுக்கான கல்வி,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி பெலகாவியில் பிரம்மாண்ட பேரணியை நடத்தினர். இதில் பஞ்சமசாலி லிங்காயத்து மடாதிபதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த கோரிக்கை நியாயமானது என முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா கூறியுள்ளார். அதேநேரத்தில் எடியூரப்பா, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிரான பாஜக தலைவர்களே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர்.

Karnataka Assembly Election 2023: Panchamasali Lingayats hold rally for Reservation

இதனிடையே பஞ்சமசாலி லிங்காயத்துகளுக்கான இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி வருகிறார். கர்நாடகாவில் பாஜகவின் வாக்கு வங்கியாக லிங்காயத்து சமூகத்தினர் உள்ளனர். கர்நாடகாவின் மொத்த மக்கள் தொகையில் 17% லிங்காயத்துகள். மற்றொரு பெரும்பான்மை சமூகமான ஒக்கலிகா கவுடா வாக்குகள் காங்கிரஸ், ஜேடிஎஸ்-க்கு கிடைக்கக் கூடியவை. ஆகையால் லிங்காயத்துகளின் இந்த கோரிக்கை ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.

கர்நாடகாவில் மொத்தம் 50% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. உயர்ஜாதியினராகிய லிங்காயத்துகளின் உட்பிரிவினர் பஞ்சமசாலி லிங்காயத்துகள். லிங்காயத்துகளில் வீர சைவ லிங்காயத்துகள் ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) இடஒதுக்கீட்டில் பிரிவு 3B-ல் 5% இடஒதுக்கீடு பெறுகின்றனர். ஆனால் பிரிவு 2A-க்குள் தங்களை கொண்டு வந்து 15% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் பஞ்சமசாலி லிங்காயத்துகள் கோரிக்கை.

லிங்காயத்துகள் மட்டுமல்லாது ஒக்கலிகா கவுடாக்கள், மராத்தாக்கள் என பல சமூகங்களும் தற்போது இடஒதுக்கீடு அளவை அதிகரிக்க வலியுறுத்துகின்றன. இதனால் கர்நாடகா சட்டசபை தேர்தலில் இடஒதுக்கீடு பிரதான பிரச்சனையாக இடம்பெறும் என தெரிகிறது. கர்நாடகா சட்டசபையில் எஸ்சி இடஒதுக்கீட்டை 15%-ல் இருந்து 17% ஆக உயர்த்தவும் எஸ்டி இடஒதுக்கீட்டை 3%-ல் இருந்து 7% ஆக உயர்த்தவும் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது உச்சநீதிமன்றத்தின் இடஒதுக்கீடு வரம்பான 50% என்கிற அளவை தாண்டியதாக இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் அண்மையில் 77% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றியது.

தமிழகத்தில் மொத்தம் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இதனையே பல மாநிலங்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு இருக்கின்றன. தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சட்டமானது அரசியல் சாசனத்தில் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருப்பதால் பாதுகாப்பானதாக இருக்கிறது. இதேபோலவே ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும் 77% இடஒதுக்கீட்டை 9-வது அட்டவணையில் சேர்க்க தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+