அனல் பறக்கும் கர்நாடக சட்டசபை தேர்தல்.. தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக நியமனம்
பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த 11 ஐஏஎஸ், 2 ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் அனைவரும் பல்வேறு மாவட்டங்களில் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். இதேபோல காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. சட்டசபை தேர்தலை எந்தவித பிரச்னைக்கும் இடம் அளிக்காமல் அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த 11 ஐஏஎஸ் அதிகாரிகள், 2 ஐபிஎஸ் அதிகாரிகள் என 13 பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, தமிழக மதுவிலக்கு துறை எஸ்.பி.வருண்குமார் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம் தலைவர் சங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கமிஷனர் சம்பத் மற்றும் ஐஏஏஸ் அதிகாரிகள் மலர்விழி, வீரராகவராவ், சோபானா உள்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த 13 அதிகாரிகளும் கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். வடகர்நாடகாவில் 5 பேரும், தென்கர்நாடகாவில் 6 பேரும் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த 13 அதிகாரிகளும் அங்கு தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் கர்நாடகாவில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் தேர்தல் ஆணையத்துக்கு உடனுக்குடன் தெரிவிப்பார்கள்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications