Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து.. கர்நாடக ஆளுநரும் அவையில் இருந்து வெளிநடப்பு.. என்ன நடந்தது!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகச் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பெங்களூர் விதான சௌதாவில் நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இன்று அவைக்கு வந்த கவர்னர் தாவர்சந்த் கெலாட், ஆளுநர் உரையை வெறும் 2 வரிகள் மட்டுமே வாசித்தார். மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள் இருந்ததாகச் சொல்லி ஆளுநர் உரையை வாசிக்க கவர்னர் மறுத்துவிட்டு வெளிநடப்பு செய்தார்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்று வியாழக்கிழமை சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பிக்கிறது. காலை 11 மணியளவில் பெங்களூரு விதான சௌதாவில் நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் தொடங்குகிறது. எப்போதும் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரை உடனேயே தொடங்கப்பட வேண்டும்.

Karnataka Assembly

இருப்பினும், தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் ஆளுநர் உரையை தாவர்சந்த் கெலாட் வாசிக்க மாட்டார் என்றே கூறப்பட்டது. இதனால் ஆளுநர் உரை இல்லாமல் அவை நடவடிக்கையைத் தொடங்குவது குறித்து முதல்வர் சித்தாரமையா ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியானது.. இருப்பினும், இன்றைய தினம் ஆளுநர் கெலாட் அவைக்கு வருகை தந்தார்.

ஆனாலும், அவர் முழு உரையையும் வாசிக்கவில்லை. வெறுமன 3 வரிகளை மட்டுமே வாசித்துவிட்டு தனது உரையை முடித்துக் கொண்டார். மேலும், அத்தோடு அவர் சட்டசபையில் இருந்தும் வெளியேறினார். தமிழக ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறிய நிலையில், கேரள ஆளுநர் சில பக்கங்களை வாசிக்காமல் வெளியேறினார். இந்தச் சூழலில் தான் கர்நாடகா ஆளுநரும் 3 வரிகளை மட்டுமே வாசித்துவிட்டு வெளியேறி இருக்கிறார்.

ஆளுநரின் இந்த உரையில் 100 நாள் வேலைத் திட்டம் மாற்றம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டிக்கும் வரிகள் இடம் பெற்று இருந்தது. அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதைப் படிக்க ஆளுநர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஜனவரி 31 வரை இந்தக் கூட்டத்தொடரை நடத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த தொடரில் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த விபி ஜி ராம் ஜி திட்டத்துக்கு எதிராகத் தீா்மானம் நிறைவேற்ற கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக விபி ஜி ராம் ஜி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த நிலையில், அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் எதிர்க்கட்சிகளும் பல்வேறு விவகாரங்களை எழுப்பத் திட்டமிட்டுள்ளது. கோகிலு லேஅவுட் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று வீடு ஒதுக்க அரசு முடிவு எடுத்துள்ள விவகாரம், சமீபத்தில் அங்கு உயர் போலீஸ் பதவியில் இருக்கும் நபரின் தனிப்பட்ட வீடியோக்கள் வெளியான நிலையில், அதையும் சட்டசபையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அங்கு இந்த சட்டசபை கூட்டத்தொடர் முழுக்கவே பரபரப்பைக் கிளப்பும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+