ஹைகோர்ட்டில் ஹிஜாப் வழக்கு இருப்பதால்.. அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.. கர்நாடக அமைச்சர் பேட்டி
பெங்களூர்: பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கர்நாடக சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் மாதுசாமி கூறினார்.
கர்நாடகத்தில் ஹிஜாப், காவி ஷால் போராட்டம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடுப்பியில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து துவங்கிய இந்த பிரச்னை படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் பரவியது.
சிக்கமகளூரு, மண்டியா, சிவமொக்கா, பாகல்கோட்டை உள்பட பிற மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போட்டி போராட்டம் நடத்தினர். சிவமொக்கா, பாகல்கோட்டையில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து 3 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

அமைச்சரவையில் விவாதம்
இந்நிலையில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இன்று மதியம் 2:30 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி நீதிபதி கிருஷ்ணா தீக்சித் உத்தரவிட்டார்.
இதற்கிடையே பெங்களூருவில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலோசனை நடத்தும் விவகாரத்தில் ஹிஜாப் குறித்த பிரச்னை இடம்பெறவில்லை. இருப்பினும் அதுபற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி நேற்று அமைச்சரவை கூட்டத்தில் ஹிஜாப் தடை விவகாரம் குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர்.

முடிவு எடுக்கவில்லை
இதுகுறித்து சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் மாதுசாமி மறைமுகமாக கூறினார். அவர் கூறுகையில், ‛‛மாநிலத்தில் நடக்கும் விவகாரம் (ஹிஜாப்) குறித்து ஆலோசித்தோம். ஆனால் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை'' என்றார்.

அட்வகேட் ஜெனரல் சந்திப்பு
முன்னதாக கர்நாடக போலீஸ் துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசினார். அப்போது ஹிஜாப் தொடர்பான போராட்டத்தில் நடந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பான கைது நடவடிக்கை உள்ளிட்ட விவரங்களை தெரிவித்தார். கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்பான விசாரணை குறித்து அட்டர்னி ஜெனரல் பிரபுலிங்க் நாவடி எடுத்துரைத்தார்.
Recommended Video

போராட தடை
இதற்கிடையே பெங்களூரு நகரில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 200 மீட்டர் பரப்பளவில் போராட்டங்கள் நடத்த தடை விதித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பந்த் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications