"தாலியை கழட்டுங்க.." அரசு தேர்வு எழுத சென்ற பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கர்நாடகாவில் சர்ச்சை
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதச் சென்ற பெண்களின் தாலியை அதிகாரிகள் அகற்றச் சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் அரசுப் பணியிடங்களுக்குத் தேர்வின் மூலமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு அமைப்பையும் கொண்டிருக்கிறது.

இப்படி அரசு சார்பில் நடக்கும் தேர்வுகளில் அவ்வப்போது முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் எழுவது வழக்கம். இதனால் ஒவ்வொரு முறையும் அரசு தேர்வுகளில் புது புது கட்டுப்பாடுகளும் கூட வரும்
கர்நாடகாவில் பரபரப்பு: இதற்கிடையே கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எக்ஸாம் சென்டருக்கு செல்லும் போது அதில் பங்கேற்ற பெண் தேர்வாளர்களின் தாலியைக் கழற்றச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. மாங்கல்யம் தவிர, திருமணமான பெண்கள் கழுத்தில் இருந்த செயின், காதணிகள், மெட்டி என அனைத்தையும் அகற்றுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பான தகவல் வெளியான நிலையில், அது கர்நாடகாவில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தைக் கையில் எடுத்துள்ள கர்நாடக பாஜக, அதிகாரிகளின் நடவடிக்கையைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.. இந்துக்களை மட்டும் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும் பாஜக எம்எல்ஏ பசங்கவுடா யத்னால் தெரிவித்துள்ளார். தாலியைக் கழற்றச் சொன்ன அதிகாரிகள், ஹிஜாப்பிற்கு மட்டும் அனுமதி தந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண் தேர்வாளர்: இது தொடர்பாகப் பெண் தேர்வாளர் ஒருவர் கூறுகையில், "நான் இந்து மதத்தைப் பின்பற்றுகிறேன். மேலும், தேர்வு வழிகாட்டுதல்களில் எந்த இடத்திலும் தாலியைக் கழற்ற வேண்டும் என்று குறிப்பிடவில்லை. அதை வைத்து என்ன செய்ய முடியும் என நினைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. நாங்கள் இது குறித்து விளக்கம் தர முயன்றோம். ஆனாலும், அதிகாரிகள் அதைக் கேட்கத் தயாராக இல்லை. கண்டிப்பாகத் தாலியைக் கழட்டியே ஆக வேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள்.
இதனால் நான் உட்பட பலரும் தேர்வு அறைக்குச் செல்லும் முன்பு தாலியைக் கழட்டினோம். அதன் பின்னரே எங்களை உள்ளே அனுமதித்தார்கள். எங்களுடன் வந்த இஸ்லாமியப் பெண்களின் ஹிஜாப்பையும் அவர்கள் சோதனை செய்தார்கள். ஆனால், அதைக் கழற்றச் சொல்லவில்லை. சோதனை செய்துவிட்டு உள்ளே அனுமதித்தார்கள். அதேபோல எங்களையும் சோதனை செய்துவிட்டு அனுமதித்திருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.
என்ன காரணம்: சமீபத்தில் கர்நாடகாவில் பல்வேறு வாரியங்கள் மற்றும் நிறுவனங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்பத் தேர்வு நடைபெற்றது. அதில் சில பேர் முறைகேடு செய்து மாட்டினார்கள். புளூடூத் கருவிகளைப் பயன்படுத்தி, அவர்கள் முறைகேட்டில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்கள் பிடிபட்டனர். அதன் பின்னரே இந்தத் தேர்வுக்குக் கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications