மண்டியா விவசாயிகள் பலன் பெற தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. குமாரசாமி செம பரிந்துரை
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி பச்சைக்கொடி காண்பித்துள்ளார். காவிரியிலிருந்து தமிழகத்திற்கு, தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக முதல்வர் பரிந்துரைத்துள்ளார்.
டெல்லியில் கடந்த மாதம் 25ம் தேதி மசூத் உசேன் தலைமையிலான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அனைத்து மாநிலங்கள் வாதங்களையும் கேட்டறிந்த காவிரி மேலாண்மை ஆணையம், "காவிரியில் தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வேண்டும். நீர் வரத்து மற்றும் மழையை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்தது.
ಮಂಡ್ಯದ ರೈತರಿಗೆ ಅನುಕೂಲ ಕಲ್ಪಿಸುವ ನಿಟ್ಟಿನಲ್ಲಿ ತಮಿಳುನಾಡಿಗೆ ನೀರು ಹರಿಸಿ, ನಮ್ಮ ರಾಜ್ಯಕ್ಕೂ ನೀರು ಬಿಡುವಂತೆ ಕಾವೇರಿ ನೀರು ನಿರ್ವಹಣಾ ಪ್ರಾಧಿಕಾರದ ಮನವೊಲಿಸುವಂತೆ ಅಧಿಕಾರಿಗಳಿಗೆ ಸೂಚನೆ ನೀಡಿದ್ದೇನೆ. ಪ್ರಾಧಿಕಾರವು ಸರ್ಕಾರದ ಮನವಿಗೆ ಸ್ಪಂದಿಸುವ ವಿಶ್ವಾಸ ನನಗಿದೆ.
— CM of Karnataka (@CMofKarnataka) July 9, 2019
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று வெளியிட்ட ட்வீட்டில், "மண்டியா விவசாயிகள் பலன்பெறுவதற்காக, தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட, முடிவு செய்துள்ளோம். தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரிகள் ஒப்புதல் வழங்க வேண்டும். இதற்காக நமது அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளேன். கர்நாடக அரசு கோரிக்கையை, காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கும் என நம்புகிறேன்" இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
போதிய மழை இல்லாத நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால், மண்டியா விவசாயிகளுக்கு இதனால் பலன் கிடைக்கும் என்பதால் தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்வர் சுற்றி வளைத்து ட்வீட் செய்துள்ளதாக, கர்நாடக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications