சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கூடாது என கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிடம் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கிறார் சசிகலா. சசிகலா, இளவரசி இருவரும் ரூ2 கோடி லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகளுடன் சிறையில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான விசாரணை அறிக்கை அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் நன்னடை விதிகளின்படி சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
தற்போது கர்நாடகா மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எடியூரப்பாவிடம் மனு ஒன்றையும் கர்நாடகா காங்கிரஸ் நிர்வாகிகள் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications