விவசாயிகளை தீவிரவாதி என்று அழைத்த குற்றச்சாட்டு... கங்கனா மீது எப்ஐஆர் ...நீதிமன்றம் உத்தரவு!!
பெங்களூரு: விவசாய மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து விவசாயிகளை தனது ட்விட்டரில் தீவிரவாதி என்று விமர்சித்து இருந்த நடிகை கங்கனா ரானாவத் மீது முதல் தகவல் அறிக்கை பதியுமாறு தும்கூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
''நாட்டில் யாரெல்லாம் குடியுரிமை மசோதாவை எதிர்த்தார்களோ அவர்கள்தான் இன்று விவசாய மசோதாவையும் எதிர்த்து, தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தீவிரவாதிகள். நான் சொல்வதை நீங்கள் நன்றாக அறிந்து இருப்பீர்கள், இருந்தாலும் தவறான செய்திகளை பரப்பி வருகிறீர்கள்'' என்று நடிகை கங்கனா ரானாவத் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி தனது ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார்.

இதைக் கண்டித்தும் நடிகை கங்கனா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ரமேஷ் நாயக் எல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், ''விவசாய மசோதாவை எதிர்ப்பவர்களை புண்படுத்தும் வகையில் நடிகை கங்கனா ரானாவத்தின் ட்விட்டர் பதிவு இருந்தது. இளைஞர்களின் மனதில் வன்முறையை விதிக்கும் வகையிலும், வன்முறைக்கு தூண்டும் வகையிலும் அவரது பதிவு இருந்தது.
எனவே அவர் மீது 153A, 504, 108 ஆகிய இந்திய தண்டனை சட்டங்களின் கீழ் புகார் பதிவு செய்ய வேண்டும்'' என்று கேட்டு இருந்தார். இதையடுத்து நடிகை கங்கனா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தும்கூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இதுகுறித்து வழக்கறிஞர் ரமேஷ் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் செய்தியில், ''அதிகார எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையம் நடிகை கங்கனா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. விசாரணையை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கங்கனா பெயர் பத்திரிக்கைகளில் அடிபட்டு வருகிறது. இதற்குக் காரணம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா அரசு மீது அவர் தெரிவித்து இருந்த புகார்கள்தான். மேலும், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் இணைந்து பேசி இருந்தார். இதையடுத்து மும்பையில் இருக்கும் அவரது அலுவலகத்தின் சிறிய பகுதி சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டு இருப்பதாகக் கூறி மும்பை மாநகராட்சி இடித்தது.
இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் கங்கனா வழக்கு தொடுத்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கங்கனாவுக்கு ரூ. 2 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் முடித்துக் கொண்டு இருக்கும் மும்பை நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications