கர்நாடகாவில் பரபரப்பு: சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில் துணை முதல்வர் டிகே சிவகுமார் போட்டியா?
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி ராஜினாமா செய்த சென்னப்பட்டணா சட்டசபை தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் தாம் போட்டியிடலாம் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் டிகே சிவகுமார் சென்னப்பட்டணாவில் போட்டியிடுவது கர்நாடகா அரசியல் கவனம் பெற்றுள்ளது.
லோக்சபா தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி வெற்றி மத்திய அமைச்சராகிவிட்டார். இதனால் தமது சென்னப்பட்டணா தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி. லோக்சபா தேர்தலில் பெங்களூர் ரூரல் தொகுதியில் துணை முதல்வர் டிகே சிவகுமாரின் சகோதரர் டிகே சுரேஷ் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். டிகே சுரேஷின் தோல்வி, டிகே சிவகுமாருக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

இந்த நிலையில் சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. இத்தொகுதியின் ஜேடிஎஸ் கோட்டையாக இருக்கிறது. இதனை காங்கிரஸ் வசமாக்கும் வகையில் டிகே சிவகுமாரே வேட்பாளராக களம் இறங்குவார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக டிகே சிவகுமார் கூறுகையில், சென்னப்பட்டணாவை நான் மிகவும் நேசிக்கிறேன். இத்தொகுதிதான் எனக்கு அரசியல் வாழ்க்கையையே கொடுத்தது. லோக்சபா தேர்தலிலும் சென்னப்பட்டணா தொகுதியில் காங்கிரஸ் கட்சி 80,000 வாக்குகளை அறுவடை செய்திருக்கிறது.
சென்னப்பட்டணாவில் உள்ள கோவில்களில் வழிபட்டுவிட்டு அத்தொகுதி மக்களுடன் ஆலோசனை நடத்துவேன். மக்கள் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் நானே போட்டியிடுவதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும். என் சகோதரர் டிகே சுரேஷ் போட்டியிடுவாரா? என்பது முடிவெடுக்கப்படவில்லை. காங்கிரஸ் மேலிடம் மற்றும் சென்னப்பட்டணா மக்கள் ஆலோசனைகள், முடிவுகளின் படியே யார் வேட்பாளர் என முடிவெடுக்கப்படும் என்றார்.
சென்னப்பட்டணாவில் டிகே சிவகுமார் போட்டியிட்டால் தற்போதைய கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். டிகே சிவகுமார், சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில் களம் கண்டால், அவரது சகோதரர் டிகே சுரேஷ், கனகபுரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடக் கூடும் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications