காங்கிரஸ் தலைவர்கள் முகமெல்லாம் பூரிப்பு.. 140 தொகுதிகளை அள்ளுமாம்.. இந்தியா டுடே எக்சிட் போல்!
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று இந்தியா டுடே வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. பாஜகவிற்கு கடும் பின்னடைவு ஏற்படும் என்றும் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
கர்நாடகாவில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் அம்மாநில சட்டப்பேரவைக்கு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன்படி, கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10 (இன்று) ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி அறிவித்தது.

வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி நிறைவு பெற்றது. தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கர்நாடக தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் உள்ளனர். ஆளும் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் 223 வேட்பாளர்களும் ஜேடிஎஸ் கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் பாஜக தற்போது 116 இடங்களுடன் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வரும் நிலையில், அடுத்து யார் ஆட்சி என்ற வாக்காளர்களின் தீர்ப்பு வரும் 13 ஆம் தேதி தெரியும்.

வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 122 தொகுதிகள் முதல் 140 தொகுதிகளிலும் பாஜக 62-80 தொகுதிகளிலும் ஜேடிஎஸ் 20-25 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை கொடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பிரசாரத்தில் பேசி வந்தார். தற்போது இந்தியா டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி காங்கிரஸ் கட்சி அந்த மேஜிக் எண்ணை தாண்டும் என்றே தெரிகிறது.
அதேவேளையில், பாஜக கடும் பின்னடவை சந்திக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஜேடிஎஸ் கட்சிக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்றே கணிப்புகள் சொல்கின்றன.
கர்நாடகாவில் கடந்த முறை 80 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை அதிகபட்சமாக 140 தொகுதிகளை பெறும் என இந்தியா டுடே கருத்து கணிப்பு கூறியிருப்பது சற்று வியப்பையே கொடுத்துள்ளது. ஏனெனில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தொங்கு சட்ட சபையை நோக்கித்தான் செல்லும் என்று கூறியிருந்த நிலையில், இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பு 122-140 என்ற கூறியிருப்பது அங்குள்ள காங்கிரஸ் கட்சியினருக்கு தற்போதே புது தெம்பை கொடுக்கத் தொடங்கிவிட்டதாம்.
மறுமுனையில் பாஜகவுக்கு இது பெரிய ஷாக் என்பதில் சந்தேகமே இல்லை. அதேபோல், கடந்த தேர்தலில் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் அதிகபட்சமாக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இதனால் ஜேடிஎஸ் கட்சிக்கும் இது பெரும் ஷாக்காகவே இருக்கும்.
தொங்கு சட்ட சபை அமைந்தால் குமாரசாமி யாருக்கு ஆதரவு கொடுக்கிறாரோ அவர்தான் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியும் என்ற நிலை இருக்கும். ஆனால், இந்தியா டுடேவின் இந்த கருத்துக்கணிப்பு ஜேடிஎஸ் கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியமாகவே உள்ளது. எது எப்படி இருந்தாலும் வாக்காளர்களின் உண்மையான தீர்ப்பு வரும் 13 ஆம் தேதிதான் உறுதியாக தெரியும்.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications