Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொங்கு சட்டசபை பீதி! பிற கட்சி எம்எல்ஏக்களை இழுக்க திட்டம்?காங்கிரஸ், பாஜக மேஜர் மூவ்-பரபர கர்நாடகா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவு நாளை வெளியாகும் நிலையில் தொங்கு சட்டசபை உருவாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ரிசல்ட்டுக்கு முன்பே காங்கிரஸ், பாஜக கட்சியினர் முக்கிய நகர்வுகளை கையில் எடுத்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. 73 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. நாளை காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலைக்குள் ரிசல்ட் முழுவதும் வெளியாகி விடும்.

இந்நிலையில் தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் சி வோட்டர் மற்றும் ஆக்சிஸ், இந்தியா டுடே ஆகிய கருத்து கணிப்புகள் மட்டும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளது.

Karnataka Elections 2023: BJP and Congress leaders talks with MLAs from other side for the fear of hung assembly

மாறாக பெரும்பலானவை மாநிலத்தில் தொங்கு சட்டசபை தான் உருவாகும் என கூறியுள்ளன. இதனால் தனித்து ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டும் காங்கிரஸ், பாஜக கட்சியினர் கவலையடைந்துள்ளன. இருப்பினும் கருத்து கணிப்பு முடிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டாம். தனி மெஜாரிட்டியுடன் நாங்கள் தான் ஆட்சியமைப்போம் என பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் கூட இருகட்சி தலைவர்களுக்கும் ஒரு பீதி உள்ளது. அதாவது மாநிலத்தில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக பல கருத்து கணிப்பில் கர்நாடகாவில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறலாம். காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காது என கூறியுள்ளன. அதேவேளையில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாஜகவும் சுமார் 80 முதல் 100 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ள என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் பாஜகவினரும் கருத்து கணிப்புகளை புறம்தள்ளிவிட்டு நிச்சயம் பாஜக ஆட்சி அமையும் என தெரிவித்து வருகின்றன.

Karnataka Elections 2023: BJP and Congress leaders talks with MLAs from other side for the fear of hung assembly

மாநிலத்தில் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் 100 இடங்களை பாஜக கைப்பற்றினால் நிச்சயம் ஆட்சியை பிடிக்க அக்கட்சி முழுமுயற்சி எடுக்கும். அதாவது ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அல்லது காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் எம்எல்ஏக்களின் ஆதரவுகளை பெற முயலும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தான் தற்போது மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன.

இதில் முக்கிய விஷயம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது காங்கிரஸ், பாஜக கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பிற கட்சி வேட்பாளர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறபப்டுகிறது. பாஜக அமைச்சர் ஆர் அசோக், மாநிலத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அதற்கு தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடிப்போம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதற்கு பிளான் பி இருப்பதாகவும் கூறினார். இதன் பின்னணியில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்களை பாஜக குறிவைத்து இழுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் அக்கட்சி தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் ஜேடிஎஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்க பேசி வருகிறது. அதோடு மட்டுமின்றி வெற்றி வாய்ப்புள்ள ஜேடிஎஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு ஜேடிஎஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து தற்போது வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள நபர்களுடன் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் தொடங்கி உள்ள தகவல்கள் கசிந்துள்ளன.

Karnataka Elections 2023: BJP and Congress leaders talks with MLAs from other side for the fear of hung assembly

இருப்பினும் கூட அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பிற கட்சியில் வெற்றி பெறுபவர்களை இழுப்பதை காட்டிலும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவே காங்கிரஸ், பாஜக கட்சிகள் விரும்புவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் நாளைய தேர்தல் முடிவு மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். கர்நாடகாவை பொறுத்தமட்டில் தொங்கு சட்டசபை அமைவதும், எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதும் புதிதல்ல. இதற்கு முன்பு 2006, 2018 தேர்தல்களில் தொங்குசட்டசபை அமைந்து ஆட்சிகள் கவிழ்ந்துள்ள வரலாறு கர்நாடகாவில் உள்ளது. இதனால் நாளைய தேர்தல் முடிவை கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+