ஊதுங்க சார்.. தேர்தல் பணிக்கு குடிபோதையில் வந்த ஊழியர்கள்.. கர்நாடகாவின் சிவமொக்காவில் பரபரப்பு
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் மதுபோதையில் தேர்தல் பணிக்கு வந்த ஊழியர்களை அதிகாரிகள் நேற்று திருப்பி அனுப்பி வைத்தனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாவட்டங்களிலும் நேற்று தேர்தல் அதிகாரிகள் செய்தார்கள்.

இந்தநிலையில் சிவமொக்கா டவுனில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இருந்து மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் உள்பட தளவாட பொருட்கள் அரசு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட்டிருந்தன.
அதேப்போல் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் நேற்று காலை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வந்தார்கள். அதில் 2 பேர் மது அருந்தி இருந்ததாக தெரிகிறது. உடனே இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் 2 பேரையும் மருத்துவ சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்தல் பணிக்கு மதுபோதையில் அதிகாரிகள் வந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications