கர்நாடகாவில் பயங்கரம்..சக்திவாய்ந்த வெடிபொருட்கள் வெடித்து 15 பேர் உடல் சிதறி மரணம்
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்ததில் 15 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் டைனமைட் வெடிபொருளை கல்குவாரிக்கு லாரி ஒன்று ஏற்றி சென்றது. நேற்று இரவு 10.30 மணி அளவில் ஹனசுடு என்ற கிராமத்தின் வழியாக வாகனம் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வாகனம் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தால் 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அதிர்வு உணரப்பட்டது.

வெடித்த வாகனம்
பயங்கர சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டதால் கிராமத்தில் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.. கட்டடங்கள் மற்றும் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன. அந்த பகுதி மக்கள் நில நடுக்கம்தான் ஏற்பட்டுவிட்டதாக சாலைகளுக்கு ஒடி வந்தனர். அப்போது தான் வெடிவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த கோர விபத்தில் 8 பேர் உடல் சிதறி பலியானதாக முதற்கட்ட தகல்கள் வெளியாகின. ஆனால் படிப்படியாக உயிரிழப்பு அதிகரித்தது.

காயம் அடைந்தனர்
இதனிடையே கல்குவாரிக்கு வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற அந்த வாகனம் வெடித்து சிதறியதில் இதுவரை 15 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள தெரிவிக்கின்றன. உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உதவிகள் தயார்
இதனிடையே ஷிவமோகாவில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட் பதிவில்,.
ஷிவமோகாவில் வெடிவிபத்தில் பொதுமக்கள் உயிரிழந்த தகவல் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றார்.

எடியூரப்பாவின் தொகுதி
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். ஷிவமோகா தொகுதி முதல்வர் எடியூரப்பாவின் சொந்த தொகுதியாகும். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications