கர்நாடக ஐடி நிறுவன ஊழியர்கள் மேலும் சில மாதங்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம்- துணை முதல்வர்
பெங்களூர்: பெங்களூர் உள்பட கர்நாடகாவில், தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் மற்றும் சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் மேலும் சில மாதங்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த மாநில துணை முதல்வரும் ஐடி மற்றும் பிடி துறைகளுக்கான அமைச்சருமான அஸ்வத் நாராயணன் தெரிவித்தார்.
சட்டசபையில் இது தொடர்பாக சுயச்சை உறுப்பினர் சரத் என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார். தனது கேள்வியில் தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதன் காரணமாக உற்பத்தி திறன் குறைந்து உள்ளது..
இந்த துறையுடன் சார்ந்த வாகன போக்குவரத்து, கார் போக்குவரத்து, உணவக தொழில்கள் வீழ்ச்சி அடைந்து உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

வலியுறுத்தாது
இதற்கு பதில் அளித்த அஸ்வத் நாராயண், கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து ஐடி தொழிலாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. எனவே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முழுமையாக திறந்து செயல்பட வேண்டும் என்று கர்நாடக அரசு வலியுறுத்தாது.

கொரோனா பரவல் குறைந்துள்ளது
கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கூட முழுமையாக அந்த தொற்றுநோய் இன்னும் ஒழியவில்லை. எனவே அரசு அவசரப்பட்டு அனைத்து நிறுவனங்களையும் திறந்து வைக்குமாறு உத்தரவிட முடியாது.

ஐடி துறை வளர்ச்சி
9 மாதங்களாக வீட்டில் இருந்து வேலை பார்த்தாலும், ஐடி துறை வளர்ச்சி அடைந்துதான் காணப்படுகிறது. சில நேரங்களில் இதுபோன்ற காலகட்டங்களில் தகவல் தொழில்நுட்பத் துறை வெகுஜன மக்களுக்கு உதவியாக இருந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், சில மாதங்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற கர்நாடக அரசு அனுமதி கொடுக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

பெங்களூர்
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு தமிழகத்தை சேர்ந்த பலரும் வேலை பார்த்து வருகிறார்கள். வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி கிடைத்துள்ளதால் அவர்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்தபடி வேலை பார்க்கிறார்கள். இதனால் வழக்கத்தை விட பெங்களூர் நகரில் வாகன போக்குவரத்து குறைவாக இருக்கிறது. ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள இடங்களில் உள்ள உணவகங்களில் கூட்டம் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications