சாலையில் அரசு பஸ்சை நிறுத்தி நமாஸ் செய்த டிரைவர்.. வீடியோ வெளியானதால் பாயும் நடவடிக்கை?
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு பஸ்சை சாலையில் நிறுத்தி பயணிகள் அமரும் இருக்கையில் டிரைவர் நமாஸ் செய்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் பல்வேறு அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றனர். கேஎஸ்ஆர்டிசி பஸ் கர்நாடகாவுக்குள்ளும், கர்நாடகாவுக்கும் வெளியேவும் இயங்கி வருகிறது. அதேபோல் பிஎம்டிசி என்பது பெங்களூர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வருகிறது.

அதேபோல் என்டபிள்யூகேஆர்டிசி (NWKRTC) பஸ்சும் இயங்கி வருகிறது. இது வடகர்நாடகா மாவட்டங்களில் அதிகமாக இயங்கி வருகிறது. இந்த என்டபிள்யூகேஆர்டிசி பஸ் ஹாவேரி மாவட்டம் ஹனகல்லில் இருந்து விஷால்கார்க் என்ற இடம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பஸ் முழுவதும் பயணிகள் இருந்தனர். இந்த பஸ் உப்பள்ளி மற்றும் ஹாவேரி இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் டிரைவர் மற்றும் கண்டக்டராக ஏஆர் முல்லா என்பவர் பணியில் இருந்தார். இந்த சமயத்தில் திடீரென்று ஏஆர் முல்லா பஸ்சை பாதி வழியில் நிறுத்தினார். பஸ்சை சாலையின் ஒருபகுதியில் அவர் நிறுத்தினார். அதன்பிறகு அவர் டிரைவர் இருக்கையின் பின்னால் உள்ள இருக்கைக்கு வந்து நமாஸ் செய்தார்.
இதனை பஸ்சில் இருந்த பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. இதற்கிடையே பஸ்சில் டிரைவர் நமாஸ் செய்யும் வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருவதோடு, விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பணி நேரத்தில் பஸ்சை நடுவழியில் நிறுத்தி டிரைவர் நமாஸ் செய்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். பஸ்சில் சில நிமிடங்களில் அவர் நமாஸ் செய்து முடித்து இருப்பார். ஒவ்வொருவரின் மத நம்பிக்கைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக ஹாவேரி டிவிஷனல் போக்குவரத்து கண்ட்ரோலர் விஜயகுமார் கூறுகையில், ‛‛பணி நேரத்தில் பஸ்சுக்குள் டிரைவர் கம் கண்டக்டர் நமாஸ் செய்தது தொடர்பான விவகாரம் எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது. பணி நேரத்தில் இத்தகைய செயலுக்கு அனுமதியில்லை.
இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டள்ளது. விசாரணை அறிக்கை வந்தவுடன் அதனடிப்படையில் நடவடிக்கை என்பது எடுக்கப்படும்'' என்று கூறினார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications