ஜாக்பாட்.. கர்நாடகாவில் அனைத்து போலீசாருக்கும் வெள்ளி பதக்கம்..சித்தராமையா முடிவு.. சுவாரசிய பின்னணி
பெங்களூர்: கர்நாடகாவில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் வெள்ளிப்பதக்கம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அதிரடியாக அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார். இவர் ஏற்கனவே 2013-2018 வரை முதல்வராக இருந்த நிலையில் 2வது முறையாக முதல்வரானார்.

இதையடுத்து தேர்தல் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் கர்நாடகாவில் பணியாற்றி வரும் அனைத்து போலீசாருக்கும் வெள்ளிப்பதக்கம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பெங்களூரில் இன்று மூத்த காவல் அதிகாரிகளின் ஆண்டு மாநாட்டில் முதல்வர் சித்தராமையா பங்கேற்று பேசினார். அப்போது தான் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அப்போது அவர், ‛‛நமது மாநிலத்துக்கு கர்நாடகா என பெயர் சூட்டியதன் பொன் விழா ஆண்டில் நாம் இருக்கிறேன். இதற்கு முன்பு மைசூர் மாகாணம் என்று இருந்தது. போலீசார் மைசூர் போலீசார் என அழைக்கப்பட்டனர். அதன்பிறகு கர்நாடகா என மாநிலம் பெயர் மாற்றப்பட்டது. இதையடுத்து கர்நாடகா போலீசார் என்று அழைக்கப்படுகின்றனர்.
நம் மாநிலத்துக்கு கர்நாடகா என பெயரிடப்பட்டதன் 50 வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் வகையில் அனைத்து போலீசாருக்கும் வெள்ளி பதக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். இந்த அறிவிப்பால் கர்நாடகா போலீசார் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications