பெங்களூருவில் திடீரென கொரோனா கிடுகிடு.. இவங்க தான் காரணம்.. கர்நாடகா அரசு பகீர் குற்றச்சாட்டு
பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பரவ வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று கர்நாடகா மாநில அரசு குற்றம்சாட்டி உள்ளது.
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் பட்டியலில் குஜராத்தையும் தாண்டி நான்காவது இடத்தை கர்நாடகா பிடித்துள்ளது கர்நாடகாவில் 59652 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் இதுவரை 21776 பேர் குணம் அடைந்துவிட்ட நிலையில் , 36627 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தலைநகர் பெங்களுருவில் தான் அதிகபட்சமாக 29619 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் பெங்களூருவில் தான் அதிகமாக உள்ளது. இதுவரை பெங்களூருவில் மட்டும் 631 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் சிகிச்சை அளிப்பதற்கு கூட பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களில் பெங்களூருவில் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்துள்ளதற்கு வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று கர்நாடகா அரசு குற்றம்சாட்டி உள்ளது. மகாராஷ்டிரா போன்ற ஹாட் ஸ்பாட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொற்றுநோயைக் கொண்டு வந்திருக்கலாம் என்றும் குற்றம்சாட்டி உள்ளது.
இதனிடையே கர்நாடகாவில் கொரோனா தொற்றுநோய் சமூகம் பரவலாக மாறவில்லை என்று மாநில சுகாதார துறை அமைச்சர் கே.சுதாகர் கூறினார், ஒருவேளை அப்படி இருந்தால், தொற்றுநோய்களின் எண்ணிக்கை லட்சங்களை கடந்திருக்கும் என்றும் அமைச்சர் கே சுதாகர் கூறினார்.
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications