"இனி தினசரி 10 மணி நேரம் வேலை செய்யணும்.." ரூல்ஸ் மாற்றும் கர்நாடக அரசு! கொந்தளிக்கும் ஐடி ஊழியர்கள்
பெங்களூர்: ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்களின் தினசரி வேலை நேரத்தை அதிகரிக்கக் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இதற்குத் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதிக்கும் என்றும், ஒர்க் லைஃப் பேலன்ஸை கெடுக்கும் என்றும் விமர்சித்துள்ளனர்.
இந்தியாவின் ஐடி தலைநகராக இப்போது பெங்களூர் இருக்கிறது. நாட்டின் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெங்களூரில் தான் அமைந்துள்ளன. இதற்கிடையே ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்களின் தினசரி வேலை நேரத்தை அதிகரிக்கக் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வேலை நேரத்தை அதிகரிக்கும் கர்நாடகா
தற்போது கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின்படி, தினசரி வேலை நேரம் 9 மணி நேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஓவர் டைம் பார்த்தாலும் கூடுதலாக ஒரு மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்று விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மூன்று மாதங்களில் அதிகபட்சமாக 50 மணி நேரம் மட்டுமே ஓவர் டைம் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில் தான் அதிகபட்ச வேலைத்தை தினசரி 10 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.. மேலும் ஓவர் டைமில் தினசரி அதிகபட்சம் 12 மணி நேரம் வரை வேலை செய்யலாம். மூன்று மாதங்களில் அனுமதிக்கப்படும் மொத்த ஓவர் டைம் நேரமும் 50 மணி நேரத்திலிருந்து 144 மணி நேரமாக அதிகரிக்கப்படும்.
ஆந்திரா
ஆந்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு தினசரி வேலை நேரத்தை ஒன்பதிலிருந்து 10 மணி நேரமாக அதிகரிக்க அனுமதித்தது. முதலீட்டை ஈர்க்கவும், பிஸ்னஸ் செய்வதை எளிதாக்கவும் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அரசு சொன்னது என்ன
அப்போது இது தொடர்பாக ஆந்திர அமைச்சர் கே. பார்த்தசாரதி கூறுகையில், "தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இருவருக்கும் சாதகமாகத் தொழிலாளர் சட்டங்களை மாற்ற அரசு விரும்புகிறது. முன்பு இருந்த விதிகளின்படி இரவில் பெண்கள் வேலை செய்ய அனுமதி இல்லை. இப்போது சில பாதுகாப்பு விதிகளுடன் வேலை செய்யலாம். நீங்கள் கூடுதலாக வேலை செய்தால், வருமானம் அதிகரிக்கும். குறிப்பாக இந்த மாற்றம் பெண்களுக்குப் பொருளாதார அதிகாரத்தை அளிக்கிறது மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது" என்று தெரிவித்தார்.
ஆனால் இந்த நடவடிக்கைக்கு ஆந்திராவிலேயே எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இது தொழிலாளர்கள் நலனுக்கு எதிரானது என்றும் இது ஊழியர்களை விட நிறுவனங்களுக்கு அதிக நன்மை பயக்கும் என்றும் சிபிஎம் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடக அரசு
இந்தச் சூழலில் தான் கர்நாடகாவிலும் இந்த முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கர்நாடக மாநில ஐடி ஊழியர்கள் சங்கம் இந்த யோசனையைக் கடுமையாக எதிர்த்தது. இதை நவீனக் கால அடிமைத்தனம் என்று கர்நாடக ஐடி ஊழியர்கள் சங்கம் சாடியுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கு எதிராக ஊழியர்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.
மிக கடும் எதிர்ப்பு
தினசரி ஓவர்டைம் 12 மணி நேரமாக இருந்தால் இரட்டை ஷிப்ட் முறையைக் கூட பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தலாம் என்றும் இது வேலை இழப்புகளுக்கு வழிவகுத்து தொழிலாளர்கள் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் பலரும் விமர்சித்துள்ளனர். வேலை நேரத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவர்களின் நல்வாழ்வை ஆதரிப்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அதேநேரம் இந்த கூடுதல் வேலை நேரம் குறித்து கர்நாடக அரசு இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்களிடையே விரிவான விவாதத்தை நடத்திய பிறகே இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு இறுதி முடிவை எடுக்கவுள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications