10ம் வகுப்பு மாணவனை கட்டிப்பிடித்து.. முத்தம் கொடுத்து போட்டோ ஷூட்! தலைமை ஆசிரியைக்கு நேர்ந்த கதி
பெங்களூர்: கர்நாடகாவில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் இளம் தலைமை ஆசிரியை ஒருவர், நெருக்கமாக போட்டோ ஷூட் நடத்தியிருக்கும் சம்பவம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள முருகமல்ல கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக புஷ்பலதா என்பவர் பணியாற்றி வருகிறார். ஆனால் கடந்த சில நாட்களாக இவரின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. காரணம் இவர் மாணவர்களுடன் நெருக்கமாக பழகுவதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் கல்வி ஆய்வு சுற்றுலாவுக்கு மாணவர்களுடன் புஷ்பலதா சென்றிருக்கிறார்.

அப்போது 10ம் வகுப்பு மாணவனுடன் இந்த ஆசிரியை நெருக்கமாக போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இது தொடர்பான படங்கள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் கசிந்த நிலையில், பெரும் பஞ்சாயத்து வெடித்திருக்கிறது. போட்டோ ஷூட்டில் மாணவன், தலைமை ஆசிரியை புஷ்பலதாவை கன்னத்தில் முத்தமிடுவதும், கட்டிப்பிடித்து தூக்கியும் இருக்கிறார். இந்த படங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர். ஒரு ஆசிரியராக இருப்பவர் இப்படியெல்லாம் நெருக்கமாக இருப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மட்டுமல்லாது இந்த விவகாரம் தொடர்பாக ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இந்த படங்கள் சம்பந்தப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களின் பார்வைக்கு சென்ற நிலையில், அவர்கள் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கிய கல்வித்துறை, முதற்கட்டமாக புஷ்பலதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக புஷ்பலதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவனுக்கும் தனக்கும் இருந்த பழக்கம் தாய்-மகன் உறவை போன்றது என்று கூறியுள்ளார். இருப்பினும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சோஷியல் மீடியாவில் ஏராளமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. பள்ளியில் கல்வி சொல்லிக்கொடுக்கும் அசிரியை இப்படி மாணவர்களுடன் நெருக்கமாக நடந்துக்கொள்வது என்பது, மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்று பலர் கூறுகின்றனர். சிலர், இருவருக்கும் இடையே உண்மையாகவே தாய்-மகன் என்கிற உணர்வு இருந்திருக்கலாம். எனவே முழுமையான விசாரணையின்றி எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் கூறியுள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications