ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள், நகைகள் யாருக்கு? வழக்கில் கர்நாடகா ஹைகோர்ட் தீர்ப்பு
பெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வரும் தனது அத்தையுமான ஜெயலலிதாவின் சொத்துகளையும் நகைகளையும் தன்னிடம் ஒப்படைக்கக் கோரி அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகள் கர்நாடக அரசின் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை கர்நாடகா அரசு, தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் வாரிசு என்ற முறையில், அவரது அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கடந்த 7 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா தரப்பில் 400 பக்கங்கள் அடங்கிய எழுத்துப்பூர்வ கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை அவரது பரம்பரை சொத்துகள். பறிமுதல் செய்யப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் பல்வேறு வகைகளில் அவருக்கு வழங்கப்பட்ட பரிசுகள். அவற்றை அரசிடம் ஒப்படைப்பதில் ஆட்சேபனை உள்ளது. அது முறைப்படி, அவரது வாரிசுகளிடம் சேர வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 13 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்றைய தினம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது ஜெயலலிதாவின் சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க கோரி ஜெ. தீபா உள்ளிட்ட வாரிசுகள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சிறப்பு நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் சொத்துகள் அனைத்தும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. வழக்கில் இணைத்துள்ள சொத்துகளை தவிர மற்றவை குறித்து மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடகா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications