தேர்தல் ரிசல்ட் வரும் முன்பே கர்நாடக கூட்டணி அரசு மீது விழுந்த குண்டு! பாஜகவுக்காக வேலை பார்த்த மஜத
Recommended Video
பெங்களூர்: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் நடுவே, உரசல் ஏற்பட்டுள்ளது.
மஜதவை சேர்ந்த மூத்த தலைவரும், அமைச்சருமான, ஜி.டி.தேவகவுடா இதற்கான, நெருப்பை கொளுத்திப் போட்டுள்ளார். மைசூர் தொகுதியில் போட்டியிட்ட கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர், சி.ஹெச்.விஜயசங்கருக்கு, மஜதவினர் ஆதரவு அளிக்காமல், பாஜக வேட்பாளர் பிரதாப் சிம்ஹாவிற்குத்தான் ஆதரவு அளித்து தேர்தல் பணியாற்றினார்கள் என்று சொல்லிவிட்டார் ஜி.டி.தேவகவுடா.
இந்த விஷயத்தில் மஜத, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடமும் தவறு உள்ளது என்றுதான் நான் சொல்வேன். தனித்தனியாக தங்கள் கட்சி வேட்பாளர்களையே களமிறக்கியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜி.டி.தேவகவுடா.

குண்டு போட்ட அமைச்சர்
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு மிக அதிக காலம் எடுத்தது. தேர்தலுக்கு 2 மாதங்கள் முன்பே, எங்கள் தலைவர்கள், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்திருக்க வேண்டும். சில இடங்களில் கூட்டணி நன்கு செயல்பட்டது. பல இடங்களில், காங்கிரஸ் கட்சியினர் அவர்கள் கட்சி வேட்பாளர்களுக்கும், மஜத தொண்டர்கள், பாஜக வேட்பாளர்களுக்கும்தான் தேர்தல் வேலை பார்த்துள்ளனர். இவ்வாறு தெரிவித்து குண்டு போட்டுள்ளார் ஜி.டி.தேவகவுடா.

உள்குத்து
மைசூர் உள்ளிட்ட மஜத பலமாக உள்ள சில பகுதிகளில் உள்ள தொகுதிகளை, தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது. எனவே, காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்க கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தொண்டர்களே உள் குத்து வேலையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதைத்தான் வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டார் ஜி.டி.தேவகவுடா.

குமாரசாமி குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு மே மாதம், காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன்பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருவருக்கொருவர் கருத்து மோதலில் ஈடுபடுவது, இது முதல் முறை கிடையாது. எனது ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் சதி செய்கிறது என்று சாட்சாத் முதல்வர் குமாரசாமியே பொது மேடையில் கண்ணீர் வடித்த சம்பவம் எல்லாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக கிண்டல்
இதனிடையே பாஜக தலைவர்களில் ஒருவரான ஆர்.அசோக் கூறுகையில், கர்நாடகாவில் மோடி அலை வீசுகிறது. மாநில மக்களின் சார்பில் ஜி.டி.தேவகவுடா குரல் கொடுத்துள்ளார் என்பதுதான் இதன் பொருள். மஜத தொண்டர்கள், நாட்டு நலனுக்காக பாஜகவுக்கு உழைத்துள்ளார்கள். கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி தோல்வியடைந்துவிட்டது என்று தெரிவித்தார்.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications