‛கையில் கத்தி’.. மோடியும் - யோகியும் தான் டார்கெட்டாம்! மிரட்டல் விடுத்தவர் கைது.. ஷாக் வீடியோ
பெங்களூர்: பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் நரம்புகளை வெட்டி கொலை செய்வதாக மிரட்டல் வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராப்பூரா தாலகா ரங்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முகமது ரசூல் கடாரே. இவர் ஹைதராபாத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் முகமது ரசூல் கடாரே பேசும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தொப்பி அணிந்தும், கருப்பு நிற கண்ணாடி அணிந்தும் அந்த வீடியோவில் பேசும் முகமது ரசூல் கடாரே கொலை மிரட்டல் விடுக்கிறார்.
அதாவது கையில் வைத்திருந்த அவர், ‛‛மோடி.. நீங்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் போன்று மத்தியில் நல்ல ஆட்சியை கொடுக்கவில்லை. நீங்கள் டீ விற்றவர். நீங்கள் பாஜக இன்றி தனி ஆளாக வந்தால் உங்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். மேலும் காங்கிரஸ் ஆட்சி நடந்தால் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நரம்புகள் வெட்டி துண்டிக்கப்படும். காங்கிரசுக்கு ஜிந்தாபாத்'' எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும் இந்த வீடியோவில் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை தரம்தாழ்ந்து அவர் விமர்சித்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவ தொடங்கியது. பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீடியோ வெளியிட்ட முகமது ரசூல் கடாரேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி ஸ்ரீராம சேனை மாவட்ட தலைவர் சரானு நாயக் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து சுராப்புரா போலீசார் கொலை மிரட்டல், ஆயுதம் வைத்திருத்தல் உள்பட 3 பிரிவுகளில் முகமது ரசூல் கடாரேவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைதும் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications