‛கையில் கத்தி’.. மோடியும் - யோகியும் தான் டார்கெட்டாம்! மிரட்டல் விடுத்தவர் கைது.. ஷாக் வீடியோ
பெங்களூர்: பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் நரம்புகளை வெட்டி கொலை செய்வதாக மிரட்டல் வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராப்பூரா தாலகா ரங்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முகமது ரசூல் கடாரே. இவர் ஹைதராபாத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் முகமது ரசூல் கடாரே பேசும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தொப்பி அணிந்தும், கருப்பு நிற கண்ணாடி அணிந்தும் அந்த வீடியோவில் பேசும் முகமது ரசூல் கடாரே கொலை மிரட்டல் விடுக்கிறார்.
அதாவது கையில் வைத்திருந்த அவர், ‛‛மோடி.. நீங்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் போன்று மத்தியில் நல்ல ஆட்சியை கொடுக்கவில்லை. நீங்கள் டீ விற்றவர். நீங்கள் பாஜக இன்றி தனி ஆளாக வந்தால் உங்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். மேலும் காங்கிரஸ் ஆட்சி நடந்தால் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நரம்புகள் வெட்டி துண்டிக்கப்படும். காங்கிரசுக்கு ஜிந்தாபாத்'' எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும் இந்த வீடியோவில் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை தரம்தாழ்ந்து அவர் விமர்சித்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவ தொடங்கியது. பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீடியோ வெளியிட்ட முகமது ரசூல் கடாரேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி ஸ்ரீராம சேனை மாவட்ட தலைவர் சரானு நாயக் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து சுராப்புரா போலீசார் கொலை மிரட்டல், ஆயுதம் வைத்திருத்தல் உள்பட 3 பிரிவுகளில் முகமது ரசூல் கடாரேவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைதும் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications