கர்நாடகா: 22 ஆண்டு தலைமறைவு- என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட நக்சலைட் தலைவர் விக்ரம் கவுடா உடல் தகனம்!
பெங்களூர்: கேரளாவில் தேடப்பட்டு வந்த கர்நாடகா மாநில நக்சலைட் (மாவோயிஸ்ட்) இயக்கத்தின் தலைவர் விக்ரம் கவுடா உடுப்பி அருகே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கர்நாடகா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விக்ரம் கவுடாவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. 114 வழக்குகளில் தேடப்பட்டு வந்த விக்ரம் கவுடா, என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது சரிதான்; இது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்த முடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த விக்ரம் கவுடா 22 ஆண்டுகளுக்கு முன்னர் நக்சலைட் இயக்கத்தில் இணைந்தார். இந்த நக்சல்பாரிகள் இயக்கம் தற்போது மாவோயிஸ்டுகள் அமைப்பாக குறிப்பிடப்பட்டு வருகிறது. கேரளா, கர்நாடகாவில் தேடப்பட்டு வந்த விக்ரம் கவுடா, கர்நாடகா மாநில நக்சல் குழுவின் தலைவராகவும் செயல்பட்டவர்.

கர்நாடகா மாநிலம் உடுப்பி ஹெப்ரி கப்வினாலே என்ற பதுங்கியில் விக்ரவும் கவுடா தலைமையில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட போலீஸ் தாக்குதலில் விக்ரம் கவுடா சுட்டுக் கொல்லப்பட்டார். 2016-ம் ஆண்டு கேரளா நீலாம்பூர் என்கவுண்ட்டரில் தப்பி ஓடியவர்தான் இந்த விக்ரம் கவுடா. நக்சல் அமைப்பின் மிக முக்கியமான தளபதிதான் இந்த விக்ரம் கவுடா.
உடுப்பி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விக்ரம் கவுடாவின் உடலை அவரது குடும்பத்தினர் நேற்று தகனம் செய்தனர். ஆனால் மாஜி நக்சலைட்டுகள் குழுவினரோ விக்ரம் கவுடா என்கவுண்ட்டர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை கர்நாடகா அரசு திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. 22 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ஒரு நக்சலைட்தான் விக்ரம் கவுடா; அவரை சுட்டுக் கொன்றதை எந்த அடிப்படையில் விசாரிப்பது என கர்நாடகா காவல்துறை அமைச்சர் பரமேஸ்வர் கேள்வி எழுப்பி உள்ளார். இதனிடையே விக்ரம் கவுடாவுடன் பதுங்கி இருந்து தப்பி ஓடியவர்களை தேடும் பணியில் நக்சல் தடுப்பு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications