கர்நாடகாவில் இப்படியும் ஒரு பெண்ணா? கல்யாணமாகி 15 நாளில்.. மாப்பிள்ளைக்கு கிறுகிறுன்னு வந்துருச்சு
பெங்களூர்: இளம்பெண் ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.. அந்த இளைஞரும் பெண்ணை உருகி உருகி காதலித்திருக்கிறார். ஆனால், பெண் வேற்று மதத்தை சேர்ந்தவர்.. இதனால், இந்த காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.. எனினும் காதல்தான் பெரிது என்று அந்த பெண் முடிவெடுத்தார்.. இதன்காரணமாக உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பறந்தார் அந்த இளைஞர். ஆனால், 15 நாளிலேயே இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. என்ன நடந்தது கர்நாடக மாநிலத்தில்?
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் மைலப்பனஹள்ளி என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் நாகர்ஜுனா.. இவருக்கு 25 வயதாகிறது.. இவர் மற்றொரு மதத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

அச்சமும், ஆபத்தும்
இருவரும் ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு நாகர்ஜுனாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தில் கொந்தளித்து விட்டனர்.. இதனால் மனம்நொந்துபோன காதலர்கள் இருவரும் கடந்த மார்ச் 23-ந் தேதி வீட்டை விட்டுவெளியேறி, திருமணம் செய்துகொண்டனர். பிறகு பெண்ணின் குடும்பத்தினரால் ஆபத்து வரும் என்று அச்சமடைந்தனர்..
சமாதானம் செய்த போலீஸ்
இதனால், கலப்பு திருமணம் செய்த புதுமண தம்பதி, பாதுகாப்பு கேட்டு சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். அப்போது இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. தன்னுடைய பெற்றோர் எவ்வளவோ சொல்லியும்கூட, தன்னுடைய காதல் கணவர்தான் முக்கியம் என்றும் அவருடன்தான் வாழ போவதாகவும் உறுதியாக சொன்னார்.
இதையடுத்து, காதலனுடனேயே இளம்பெண்ணை போலீசார் அனுப்பி வைத்தனர்.. இப்போது திருமணமாகி 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த புதுப்பெண், மறுபடியும் சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்.. ஒரு கடிதத்தையும் கைப்பட எழுதி போலீசில் தந்துள்ளார்..
கடிதம் தந்த பெண்
அதில், "நான் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டேன். இந்த அதிர்ச்சியில் என்னுடைய அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், நான் நாகர்ஜுனாவை பிரிந்து என்னுடைய பெற்றோருடனேயே செல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.. கடிதத்தை ஸ்டேஷனில் தந்துவிட்டு, காதல் கணவரை பிரிந்து அந்த பெண், அவருடைய அம்மா வீட்டுக்கும் சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த நாகர்ஜுனா, புது மனைவி தன்னை பிரிந்து சென்ற சோகத்தில் மூழ்கியிருக்கிறாராம். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications