கர்நாடகாவில் இப்படியும் ஒரு பெண்ணா? கல்யாணமாகி 15 நாளில்.. மாப்பிள்ளைக்கு கிறுகிறுன்னு வந்துருச்சு
பெங்களூர்: இளம்பெண் ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.. அந்த இளைஞரும் பெண்ணை உருகி உருகி காதலித்திருக்கிறார். ஆனால், பெண் வேற்று மதத்தை சேர்ந்தவர்.. இதனால், இந்த காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.. எனினும் காதல்தான் பெரிது என்று அந்த பெண் முடிவெடுத்தார்.. இதன்காரணமாக உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பறந்தார் அந்த இளைஞர். ஆனால், 15 நாளிலேயே இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. என்ன நடந்தது கர்நாடக மாநிலத்தில்?
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் மைலப்பனஹள்ளி என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் நாகர்ஜுனா.. இவருக்கு 25 வயதாகிறது.. இவர் மற்றொரு மதத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

அச்சமும், ஆபத்தும்
இருவரும் ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு நாகர்ஜுனாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தில் கொந்தளித்து விட்டனர்.. இதனால் மனம்நொந்துபோன காதலர்கள் இருவரும் கடந்த மார்ச் 23-ந் தேதி வீட்டை விட்டுவெளியேறி, திருமணம் செய்துகொண்டனர். பிறகு பெண்ணின் குடும்பத்தினரால் ஆபத்து வரும் என்று அச்சமடைந்தனர்..
சமாதானம் செய்த போலீஸ்
இதனால், கலப்பு திருமணம் செய்த புதுமண தம்பதி, பாதுகாப்பு கேட்டு சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். அப்போது இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. தன்னுடைய பெற்றோர் எவ்வளவோ சொல்லியும்கூட, தன்னுடைய காதல் கணவர்தான் முக்கியம் என்றும் அவருடன்தான் வாழ போவதாகவும் உறுதியாக சொன்னார்.
இதையடுத்து, காதலனுடனேயே இளம்பெண்ணை போலீசார் அனுப்பி வைத்தனர்.. இப்போது திருமணமாகி 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த புதுப்பெண், மறுபடியும் சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்.. ஒரு கடிதத்தையும் கைப்பட எழுதி போலீசில் தந்துள்ளார்..
கடிதம் தந்த பெண்
அதில், "நான் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டேன். இந்த அதிர்ச்சியில் என்னுடைய அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், நான் நாகர்ஜுனாவை பிரிந்து என்னுடைய பெற்றோருடனேயே செல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.. கடிதத்தை ஸ்டேஷனில் தந்துவிட்டு, காதல் கணவரை பிரிந்து அந்த பெண், அவருடைய அம்மா வீட்டுக்கும் சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த நாகர்ஜுனா, புது மனைவி தன்னை பிரிந்து சென்ற சோகத்தில் மூழ்கியிருக்கிறாராம். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications