அட.. 7 நகரங்களாக பிரிக்கப்படுகிறதா பெங்களூர்? சட்டசபை கூட்டு ஆய்வு குழு பரிந்துரை
பெங்களூர்: கர்நாடக தலைநகரான பெங்களூர் தற்போது ஒரே மாநகராட்சியாக இருக்கிறது. இதனை 7 நகரங்களாக பிரிக்க சட்டசபை கூட்டு ஆய்வு குழு பரிந்துரை செய்திருக்கிறது.
அதன்படி ஒவ்வொரு மாநகராட்சியிலும் குறைந்தது 10 லட்சம் மக்கள் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத் தலைமையிலான கர்நாடக சட்டமன்ற கூட்டு ஆய்வு குழு இந்த பரிந்துரையை கொடுத்திருக்கிறது. நிர்வாகத்தை பரவலாக்கவும், எளிமையாக்கவும் இது பயன்படும் என குழு தெரிவித்திருக்கிறது. நேற்று இது தொடர்பான அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த ரிஸ்வான் அர்ஷத்,
"ஒவ்வொரு மாநகராட்சியும் குறைந்தபட்சம் ரூ.300 கோடி அளவுக்கு வருவாயை ஈட்ட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மாநகராட்சியை மெயின்டெயின் செய்ய முடியும். மாநகராட்சிகள் தங்களை தாங்களே நிர்வகித்துக்கொள்ள போதுமான வருவாயை உருவாக்க வேண்டும். இந்த வருவாய் செலவீனங்களுக்கு போதுமானதாக இருப்பதை உறுதி செய்யவும் வேண்டும்.
அதேபோல புதிய மாநகராட்சிகளில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் 50% அளவுக்கு வேளாண் துறையை சார்ந்து இருந்தால் போதுமானது. மீதமுள்ள 50% வேலைவாய்ப்புகள் வேளாண்துறை தவிர்த்து உருவாக்கப்பட வேண்டும். மாநகராட்சி அமைப்புக்கு ஏற்ப, புதிய மாநகராட்சியில் மேயர் (Mayor), ஆணையர் (Commissioner), இணை ஆணையர் (Joint Commissioner), நிலையான குழுக்கள் (Standing Committees) மற்றும் வார்டு குழுக்கள் (Ward Committees) இருக்க வேண்டும்.
பெங்களூரு நகர்ப்புற பகுதிகளுக்குள் வரும் ஒவ்வொரு மாநகராட்சிக்கும் "Bengaluru" என்ற ஒரே பொதுவான முன் பெயர் இருக்க வேண்டும். உதாரணமாக Bengaluru North City Corporation, Bengaluru South City Corporation இப்படி.
அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். வறுமையை குறைத்து, ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சிகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். பெங்களூரின் மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. கடந்த 2018ல் 78 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை 2025ல் 1.5 கோடியாக உயர்ந்திருக்கிறது. புதிய மாநகராட்சிகள் உருவாக்குவது தொடர்பாக நிபுணர்கள் தரப்பிலிருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன" என்று ரிஸ்வான் அர்ஷாத் கூறியுள்ளார்.
மாநகராட்சியின் அமைப்பை பொறுத்தவரை, மேயர் மற்றும் துணை மேயரின் பதவிக்காலம் 30 மாதங்கள். அதாவது 2.5 ஆண்டுகள். நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனில், நிர்வாகம் அமைந்த நாளிலிருந்து 6 மாதங்கள் வரை ஆகியிருக்க வேண்டும். அதற்கு முன்னர் கொண்டுவர முடியாது. மாநகராட்சி நிர்வாகத்திற்கான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்தின் (Elected Council) முழு பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமான நிறைவேறப்பட்டால், அது நிறைவேறிய 120 நாட்களுக்குள் Greater Bengaluru Authority (GBA) உருவாக்கப்பட வேண்டும். இது மூன்று அமைப்புகளாக இருக்கும். அதாவது,
1. பெருநகர பெங்களூர் ஆணையம் (GBA)
2. மாநகராட்சி நிர்வாகங்கள்(City Corporations)
3. வார்டு குழுக்கள்(Ward Committees )
இதில் பெருநகர பெங்களூர் ஆணையத்தின் (GBA) தலைவராக முதல்வர் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications