Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளம்பெண்கள் தான் குறி..இப்படியும் கூட ஏமாற்றலாமா? மாண்டியாவை மிரள விட்ட மது! ஆனா இது புதுசா இருக்கே!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் மேட்ரிமோனியல் இணையதளங்கள் வாயிலாக இளம் பெண்களிடம் பழகி சுமார் 60 லட்சம் ரூபாய் பணத்தை பறித்த இளைஞரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அரசு வேலைக்கு பணம் கட்ட வேண்டும் என பெண்களை ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இந்த டிப் டாப் மோசடி இளைஞர்.

உறவினர்கள் புடைசூலா பெண் பார்த்து திருமணம் முடித்த காலமெல்லாம் மலையேறி போய்விட்டது. தற்போது எல்லாம் பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் பலர் பேசி பழகி திருமணமும் செய்து கொள்கின்றனர்.

karnataka matrimonial national


இது ஒரு புறம் இருக்க மேட்ரிமோனியல் எனப்படும் திருமண சேவை இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து அதன் மூலம் திருமணம் செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். இதற்கெனவே பல நிறுவனங்களும், முகவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறனர்.


ஆனால், மேட்ரிமோனியல் தளங்கள் மூலமாக, சில நேரங்களில் இதில் மோசடிகளும் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருமண தகவல் சேவை இணையதளங்கள் எடுத்தாலும் அவ்வப்போது சில மோசடி சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் தான். அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் நடைபெற்று இருக்கிறது. கர்நாடகாவில் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்களிடம் பேசி சுமார் 60 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கர்நாடக மாநிலம் தாவணகெரேவை சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவர் பிரபல இணையதளம் ஒன்றில் தனக்கு வரன் தேடி இருக்கிறார். தொடர்ந்து அதே இணையதளத்தின் வாயிலாக அறிமுகமான இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இளம்பெண்ணை பயங்கரமாக வர்ணித்து பேசிய அவர் திருமணம் செய்து கொண்டால் உன்னைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என பேசி அவரை நம்ப வைத்திருக்கிறார்.

சில நாட்களில் மைசூர் ரயில்வே ஒர்க் ஷாப்பில் வேலை இருக்கிறது எனவும், 21 லட்சம் ரூபாயை செலுத்தினால் உடனடியாக உனக்கு வேலை கிடைக்கும், அதன்பின் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதை அடுத்து அதனை நம்பிய அந்தப் பெண் 21 லட்சம் ரூபாயை அவரது வங்கி கணக்கில் செலுத்தி இருக்கிறார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட பின் அந்த இளைஞர் அந்த இளம் பெண்ணின் அழைப்பை ஏற்கவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் தாவணகெரே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் மாண்டியாவை சேர்ந்த 31 வயதான மது என்ற இளைஞரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாண்டியாவை சேர்ந்த மது திருமண வலைதளங்கள் மூலமாக படித்த இளம் பெண்களிடம் அதிகமாகி திருமணம் செய்து கொள்வதாக பேசுவார். சில நாட்கள் கடந்த பின் அரசு வேலை வாங்கித் தருகிறேன் ,அதற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை காட்டி அதற்கு பணம் கட்ட வேண்டும் என லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றுவதை வழக்கமாக வைத்தது தெரிய வந்தது.

இதுவரை மது சிக்மங்களூரைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய், மண்டியாவை சேர்ந்த பெண்ணிடம் 25 லட்சம் ரூபாய், பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணிடம் இரண்டு லட்சம் ரூபாய் என பல பெண்களிடம் சுமார் 65 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாகவும் அவரது மோசடி பட்டியல் இன்னும் நீளும் எனவும், அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+