பிகினி ஆடையில் கர்நாடகா மாநிலத்தின் கொடி.. கொதித்த கன்னடர்கள்.. மன்னிப்பு கோர அமேசானுக்கு அழுத்தம்
பெங்களூர்: பிகினி ஆடையில் கர்நாடகா மாநிலத்தின் கொடி, அதன் நிறம் பதித்து விற்பனை செய்த அமேசான் நிறுவனம் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
அமேசான் எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் வறட்டி முதல் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் ஆடைகளையும் விற்பனை செய்கிறது.
இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் கனடா இணையதளத்தில் பிகினி ஆடையை அறிமுகம் செய்திருந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

பிகினி ஆடை
காரணம் என்னவெனில் அந்த பிகினி ஆடையானது கர்நாடக மாநிலத்தின் கொடி நிறத்தில் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த ஆடையில் அந்த மாநிலத்தின் கொடியும் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து இந்த புகைப்படம் வைரலானது.

எதிர்ப்பு
இதற்கு கன்னட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அண்மையில் இந்தியாவிலேயே கன்னடம் மிகவும் மோசமான மொழி என கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்து அது சர்ச்சையாகி பின்னர் அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியது. தற்போது இந்த ஈ காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம் பெண்கள் அணியும் உள்ளாடையில் கர்நாடகாவின் அரசின் கொடியை பதித்து அவமானப்படுத்தியுள்ளது.

கன்னட மொழி
இதுகுறித்து கர்நாடகா மாநில கன்னட மொழி மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவலி சனிக்கிழமை கூறுகையில் அண்மையில் கூகுள் நிறுவனம் கன்னட மொழியை அவமானப்படுத்தியது. அந்த காயங்கள் ஆறுவதற்கு முன்னரே அமேசான் கனடாவில் பிகினி உடையில் எங்கள் மாநிலத்தின் கொடி இடம்பெற்றுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள்
கன்னடர்களை இவ்வாறு தொடர்ந்து அவமதிக்கும் போக்கை பன்னாட்டு நிறுவனங்கள் கைவிட வேண்டும். இது கன்னடர்களின் பெருமைக்கு பங்கம் விளைவிக்கும் விஷயம். இது போன்ற சம்பவங்களை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே அமேசான் கனடா நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லிம்பாவலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications