2024 தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக, மகாராஷ்டிரா 3 ஆக உ.பி.4 ஆக பிரியும்-பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி
பெங்களூர்: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 மாநிலங்களாகவும் உத்தரப்பிரதேசம் 4 மாநிலங்களாகவும் பிரிக்கப்படும் என்று கர்நாடகா அமைச்சர் உமேஷ் கட்டி பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதலே தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பிரிக்கப்படும் என்கிற பேச்சு உள்ளது. மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகத்தின் எல்.முருகனும் அமைச்சரானார். அப்போது மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கொங்கு நாடு என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையானது.

தமிழகத்தில் ஏற்கனவே வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு பிரிவினை கோரிக்கை இருந்தது. இந்த நிலையில் பாஜக, கொங்குநாடு கோரிக்கையை முன்வைக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அத்துடன் பாஜக தலைவர்கள் பலரும் கொங்குநாடு - தனி மாநிலத்துக்கு ஆதரவாக கருத்துகளை கூறி இருந்தனர். பின்னர் இந்த சர்ச்சை அடங்கியது.
இந்நிலையில் கர்நாடகா அமைச்சர் உமேஷ் கட்டா மாநிலங்கள் பிரிவினை தொடர்பாக தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சையாகி உள்ளன. இது தொடர்பாக உமேஷ் கட்டி கூறியதாவது: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நாடு 50 மாநிலங்களாகப் பிரிக்கப்படும் என்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்படி பிரிக்கப்படும் போது வட கர்நாடகா தனி மாநிலமாக உருவாகும்.
2024-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மோடி பல புதிய மாநிலங்களை உருவாக்குவார்; மகாராஷ்டிரா 3 மாநிலங்களாக பிரிக்கப்படும். உத்தரப்பிரதேசம் 4 மாநிலங்களாகப் பிரிக்கப்படும். மொத்தம் 50 புதிய மாநிலங்கள் உருவாக்கப்படும்.
Recommended Video
பெங்களூருவில் மக்கள் தொகை அதிகரித்துவிட்டது; வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது; மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் முடியவில்லை. வட கர்நாடக வளமிக்கது. பொதுமக்கள் அனைவரும் வட கர்நாடகா தனி மாநில கோரிக்கைக்காக குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு உமேஷ் கட்டி கூறினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications