2024 தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக, மகாராஷ்டிரா 3 ஆக உ.பி.4 ஆக பிரியும்-பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி
பெங்களூர்: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 மாநிலங்களாகவும் உத்தரப்பிரதேசம் 4 மாநிலங்களாகவும் பிரிக்கப்படும் என்று கர்நாடகா அமைச்சர் உமேஷ் கட்டி பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதலே தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பிரிக்கப்படும் என்கிற பேச்சு உள்ளது. மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகத்தின் எல்.முருகனும் அமைச்சரானார். அப்போது மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கொங்கு நாடு என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையானது.

தமிழகத்தில் ஏற்கனவே வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு பிரிவினை கோரிக்கை இருந்தது. இந்த நிலையில் பாஜக, கொங்குநாடு கோரிக்கையை முன்வைக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அத்துடன் பாஜக தலைவர்கள் பலரும் கொங்குநாடு - தனி மாநிலத்துக்கு ஆதரவாக கருத்துகளை கூறி இருந்தனர். பின்னர் இந்த சர்ச்சை அடங்கியது.
இந்நிலையில் கர்நாடகா அமைச்சர் உமேஷ் கட்டா மாநிலங்கள் பிரிவினை தொடர்பாக தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சையாகி உள்ளன. இது தொடர்பாக உமேஷ் கட்டி கூறியதாவது: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நாடு 50 மாநிலங்களாகப் பிரிக்கப்படும் என்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்படி பிரிக்கப்படும் போது வட கர்நாடகா தனி மாநிலமாக உருவாகும்.
2024-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மோடி பல புதிய மாநிலங்களை உருவாக்குவார்; மகாராஷ்டிரா 3 மாநிலங்களாக பிரிக்கப்படும். உத்தரப்பிரதேசம் 4 மாநிலங்களாகப் பிரிக்கப்படும். மொத்தம் 50 புதிய மாநிலங்கள் உருவாக்கப்படும்.
Recommended Video
பெங்களூருவில் மக்கள் தொகை அதிகரித்துவிட்டது; வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது; மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் முடியவில்லை. வட கர்நாடக வளமிக்கது. பொதுமக்கள் அனைவரும் வட கர்நாடகா தனி மாநில கோரிக்கைக்காக குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு உமேஷ் கட்டி கூறினார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications