கணவனின் உடலை குளியலறைக்குள் தரதரவென இழுத்து.. இளம் மனைவி செய்த காரியத்தை பாருங்க.. உச்சக்கட்ட கொடுமை
பெங்களூர்: கர்நாடகாவில் நடந்த சம்பவம் பொதுமக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.. இது தொடர்பான 2 பேர் கைதாகி உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது ஹாவேரி மாவட்டத்தில்?
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் அருகே உள்ளது சிக்கரூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சாதிக்.. இவருக்கு 30 வயதாகிறது.. மனைவி பெயர் சல்மா.. 25 வயதாகிறது.. இவர்களுக்கு கடந்த 2021ல் திருமணம் நடந்துள்ளது.. ஆனால், தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.

2 வீட்டு பெற்றோர்களும் பார்த்து நடத்தி வைத்த திருமணம் இதுவென்றாலும், திருமணத்திற்கு முன்பு சல்மா, ஜாபர் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.. திருமணத்திற்கு பிறகும் அவருடன் சல்மா நெருங்கி பழகி வந்திருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல், 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்.
கணவர் கொலை: இந்த கள்ளக்காதல் விவகாரம் சாதிக்கிற்கு தெரியவந்ததையடுத்து, அதிர்ச்சியடைந்தார்.. சல்மாவை கண்டித்தார்.. கள்ளக்காதலை கைவிட சொன்னார்.. ஆனால், சாதிக்கின் பேச்சை சல்மா கேட்கவில்லை.. இதனால், தம்பதிக்குள் தகராறு தொடர்ந்தது.. கடந்த 25-ந் தேதியும் மீண்டும் தம்பதிக்குள் தகராறு வெடித்தது..
ஒருகட்டத்தில் எரிச்சலடைந்த சல்மா, உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றுவிடுவது என்று முடிவெடுத்தார்.. இதுகுறித்து ஜாபரிடம் சொல்லவும், அவரும் சாதிக்கை கொல்ல சம்மதித்தார்..
அதன்படியே, சம்பவத்தன்று இரவு சல்மாவும், ஜாபரும் சேர்ந்து சாதிக்கின் கழுத்தை நெரித்தனர்.. பிறகு மரக்கட்டையால் சாதிக்கை கொடுமையாக தாக்கினர்.. இதில் சாதிக் துடிதுடித்து இறந்துவிட்டார்.. பிறகு, சாதிக்கின் சடலத்தை, தரதரவென குளியல் அறைக்கு இழுத்து சென்று, உடம்பிலிருந்த ரத்த கறைகளை எல்லாம் கழுவினார்..
ஒப்பாரி : அதற்கு பிறகு, அக்கம் பக்கத்தினரிடம் ஓடிச்சென்று, பாத்ரூமில் சாதிக் வழுக்கி விழுந்துவிட்டதாக ஒப்பாரி வைத்தார்.. பிறகு சாதிக்கின் குடும்பத்தினருக்கும் விஷயத்தை சொல்லி அழுதார்.
இதைக்கேட்ட சாதிக் குடும்பத்தினர், பதறியடித்து கொண்டு வந்து, சாதிக்கின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.. பிறகு இறுதிச்சடங்கையும் செய்து, சாதிக்கின் உடலை புதைத்து விட்டனர்.. ஆனால், சடலத்தை புதைத்த மறுநாளே, சல்மாவின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் தென்பட்டுள்ளது.. சாதிக்கின் சகோதரர் இதனை கவனித்துள்ளார்.. அதற்கு பிறகுதான், சாதிக் குளியல் அறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்திருக்க வாய்ப்பிருக்காது என்று நினைத்து, ஹம்சபாவி போலீசில் புகார் அளித்தார்.
கிடுக்கிப்பிடி: போலீசாரும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை சல்மாவிடம் துவங்கினர்... எடுத்ததுமே முன்னுக்குபின் முரணாக பேச துவங்கினார் சல்மா.. பிறகுதான், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, மொத்த உண்மையையும் ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சாதிக்கை ஜாபருடன் சேர்ந்து கொன்றதாக வாக்குமூலம் தந்தார்.. இதையடுத்து, கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications