Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனவில் வந்த சாமி சிலை! பூமிக்கடியில் கிடைத்த கிருஷ்ணரால் மொத்த நிலத்தையும் இழந்த பெங்களூர்வாசி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த நபரின் கனவில் அடிக்கடி சாமி சிலை வந்த நிலையில் அவரது நிலத்தை தோண்டிப்பார்த்தபோது கிருஷ்ணர் சிலை கிடைத்தது. இதையடுத்து கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டபோது திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டது. இதையடுத்து மொத்த நிலத்தையும் அரசு கைப்பற்றியது.

பெங்களூரை சேர்ந்தவர் லட்சுமண் (வயது 55). இவருக்கு சொந்தமான நிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி அருகே தெக்கார் கிராமத்தில் உள்ளது. இங்கு அவர் விவசாயம் செய்து வருகிறார். பழச்செடிகள், பாக்கு மரங்களை அவர் பயிரிட்டுள்ளார்.

Krishna statue founds in Belthangady near Dakshina Kannada after Bangalore man dream

இந்நிலையில் தான் லட்சுமண் சமீபத்தில் ஒரு கனவு கண்டார். அந்த கனவில் கிருஷ்ணர் தோன்றியுள்ளார். பலமுறை இந்த கனவுகள் அவருக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த அவரது கனவு என்பது, ‛‛அவரும் அவரது நண்பரும் தெக்கார் கிராமத்தில் உள்ள தோட்டத்துக்கு செல்கின்றனர். அங்குள்ள கிணற்றில் அவரது நண்பர் குளிக்கிறார். திடீரென்று தண்ணீரில் அவர் மூழ்கவே, அவரை தேடி லட்சுமண் கிணற்றில் குதித்தார். அப்போது கிணற்றில் கிருஷ்ணர் சிலை தெரிகிறது'' எனும் வகையில் அமைந்திருந்தது. இதையடுத்து திடுக்கிட்டு விழித்த லட்சுமண் மறுநாள் காலையில் தெக்கார் கிராமத்துக்கு சென்றார்.

அங்கு ஒருவர் அவரது நிலம் எனக்கு சொந்தம் எனக்கூறி உரிமை கொண்டாடினார். மேலும் ஜேசிபி வாகனம் கொண்டு அவர் நிலத்தை தோண்டினார். இதற்கு லட்சுமண் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வேளையில் லட்சுமண் அங்குள்ள மக்களிடம் தனக்கு வந்த கனவு குறித்தும், இந்த நிலத்தில் கிருஷ்ணர் சிலை இருப்பது பற்றியும் தெரிவித்தார்.

Krishna statue founds in Belthangady near Dakshina Kannada after Bangalore man dream

இதையடுத்து அந்த ஜேசிபி வாகனம் மூலம் குறிப்பிட்ட இடத்தை தோண்டியபோது பூமிக்கடியில் புதைந்து இருந்த கிருஷ்ணர் சிலை கிடைத்தது. இதையடுத்து பொதுமக்கள் பரவசமடைந்தனர். மேலும் சிலை கிடைத்த இடத்தில் கோவில் கட்ட அவர்கள் முடிவு செய்தனர். இதற்கிடையே தான் லட்சுமண் மற்றும் இன்னொரு நபருக்கு இடையேயான நில பிரச்சனை அடுத்தக்கட்டத்துக்கு சென்றது.

இதையடுத்து சர்வேயர்கள் வரவழைக்கப்பட்டு நிலம் அளவிடப்பட்டது. அப்போது 25 சென்ட் நிலம் என்பது அரசுக்கு சொந்தமானது என்பதும், முதலில் யாரோ அதனை ஆக்கிரமித்து வைத்திருப்பதும், அதனை லட்சுமண் வாங்கி விவசாயம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து விவசாயம் செய்ததற்கான இழப்பீடாக லட்சுமணுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறி அந்த நிலத்தை அரசு மீட்டெடுத்தது. மேலும் சிலையையும் அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

முதற்கட்ட தகவலின்படி அந்த சிலை சுமார் 600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். மேலும் இதற்கு முன்பு அந்த இடத்தில் கோவில் இருந்திருக்கலாம் எனவும், கோவிலில் சிலை பூமிக்கடியில் புதைந்து இருந்த நிலையில் தற்போது அது கிடைத்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+