ஆட்சியை கலைக்க சபாநாயகருக்கு பாஜக ரூ.50 கோடி லஞ்சம்.. ஆடியோ வெளியிட்டு குமாரசாமி பகீர் குற்றச்சாட்டு
பெங்களூர்: கர்நாடக சபாநாயகருக்கு, பாஜக தலைவர் எடியூரப்பா ரூ.50 கோடி வழங்கி ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக அம்மாநில முதல்வர் எச்.டி.குமாரசாமி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கர்நாடகாவில் நடைபெறும் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராக உள்ளார். இந்த நிலையில், 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென தலைமையிடம் சொல்லிக்கொள்ளாமல் மும்பையில் முகாமிட்டுள்ளனர். இதனால் ஆட்சி கவிழும் சூழல் எழுந்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடக அரசின் பட்ஜெட் இன்று பகல் 12.30 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக தனது வீட்டில் நிருபர்களை சந்தித்தார் குமாரசாமி. அப்போது அவர் கூறியதாவது:

எம்எல்ஏவுடன் எடியூரப்பா சந்திப்பு
ம.ஜ.த எம்எல்ஏ சரண் கவுடாவிற்கு, எடியூரப்பா போனில் அழைப்பு விடுத்துள்ளார். தேவதுர்கா என்ற பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது, ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டு, பாஜகவில் இணையுமாறும், இவ்வாறு செய்தால் அமைச்சர் பதவியும் ரூ.25 கோடி பணமும் வழங்கப்படும் எனவும் எடியூரப்பா பேரம் பேசியுள்ளார்.

சபாநாயகருக்கு 50 கோடி
மேலும், சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு ரூ.50 கோடி கொடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அரசை கவிழ்க்க திட்டம் வைத்துள்ளதாகவும், எடியூரப்பா கூறியுள்ளார். இவ்வளவு பணம் இவர்களுக்கு ஏது? பண மதிப்பிழப்புக்கு பிறகு இந்த பணம் பாஜக தலைவர்களிடம் வந்தது எப்படி?

சபாநாயகருக்கு கடிதம்
கர்நாடக அரசியல் வரலாற்றில் இல்லாத களங்கமாக, சபாநாயகருக்கே லஞ்சம் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து சபாநாயகருக்கு நான் கடிதம் எழுதி, லஞ்சம் கொடுக்க முயன்றோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைவிடுக்க உள்ளேன். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

ஆடியோ பதிவு
மேலும், ஆடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டார். அதில், எடியூரப்பா இந்த எம்எல்ஏவுடன் பேசுவதை போன்ற ஆடியோ பதிவு உள்ளது. அதில், 15 எம்எல்ஏக்கள் தங்கள் வசம் இருப்பதாகவும், சபாநாயகருக்கு ரூ.50 கோடி வழங்க பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ரமேஷ்குமார் தனது நண்பர் என்றும், ஆளுநர் மூலமாக அரசை கலைக்கவும் ஏற்பாடு செய்வதாகவும் எடியூரப்பா கூறுவதை போல வாய்ஸ் கேட்கிறது.முதல்வர் குமாரசாமியின் இந்த குற்றச்சாட்டால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications