கர்நாடகா: ஏப்.26-ல் முதல் கட்ட தேர்தல்- களத்தில் 247 வேட்பாளர்கள்! இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்
பெங்களூர்: கர்நாடகாவில் ஏப்ரல் 26-ந் தேதி லோக்சபா தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் 247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
18-வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் நடைபெற்றது. 2-ம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களின் 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ந் தேதி நடைபெறுகிறது.

கர்நாடகாவின் 14 தொகுதிகள், கேரளாவின் 20 தொகுதிகள் என மொத்தம் 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தொகுதிகள் அனைத்திலும் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
கர்நாடகா முதல் கட்ட தேர்தல் களத்தில் மொத்தம் 247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 21 பேர் பெண்கள். கர்நாடகாவின் மண்டியா லோக்சபா தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி, பாஜக தேசிய இளைஞரணித் தலைவர் தேஜ்ஸ்வி சூர்யா, பெங்களூர் தெற்கு, பெங்களூர் புறநகரில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சுரேஷ், ஹாசனில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, மைசூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக மைசூர் மகாராஜா யதுவீர் உடையார் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.
கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. கர்நாடகாவில் பிரதமர் மோடி 4 முறை பிரசாரம் செய்துள்ளார். கர்நாடகாவில் ராகுல் காந்தி ஒரு முறை பிரசாரம் மேற்கொண்டார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரான கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, தீவிர பிரசாரம் செய்தார். மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். 91 வயதிலும் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரசாரம் செய்தார். பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தேர்தல் பிரசார கூட்டத்திலும் தேவகவுடா பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications