வேலைக்கார பெண் முன்பே.. பெங்களூர் தொழில் அதிபர் அடிக்கடி செய்த காரியம்.. வீட்டில் நடந்த ட்விஸ்ட்
பெங்களூர்: பெங்களூர் தொழில் அதிபர் வீட்டில் திருடிய குற்றச்சாட்டில் வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார்.11.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. வேலைக்கார பெண் முன்பே குறிப்பிட்ட தொழில் அதிபர் பீரோ சாவியை வைப்பதும், பின்னர் அதில் இருந்து பணம், நகை எடுப்தையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அதை பார்த்து அந்த பெண் கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது.
பெரிய தொழில் அதிபர்களின் வீடுகளில் பணிபுரியும் வேலைக்கார பெண்கள் சிலர் நகைகளை திருடியதாக, பணத்தை திருடியதாக புகார்களில் சிக்கி கைதாகி உள்ளார்கள். நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்க நகைகளை திருடியதாக வேலைக்கார பெண் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இதேபோல் "நாடோடிகள் 2", "காதல் கண்கட்டுதே" உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த நடிகை அதுல்யா வீட்டில் வேலைக்கார பெண் நகை மற்றும் பணம் திருடி கடந்த ஜூலை மாதம் கைதானார். இதேபோல் பிரபல நடிகர் கருணாகரன் வீட்டில், 60 சவரன் நகை திருடு போனதாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கடந்த அக்டோபர் மாதம் வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார். இதேபோல் பல இடங்களில் வேலைக்கார பெண்கள் திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர் புவனேஷ்வரி நகர், முதலாவது மெயின் ரோட்டில் உள்ள தொழில்அதிபர் வீட்டில் வேலைக்கார பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். வீட்டில் வசிப்போரின் நன்மதிப்பை பெறும் விதமாக அந்த பெண் வேலையும் செய்திருக்கிறார் இதனால் அந்த பெண் கண்முன்னே பீரோவில் நகைகளை வைப்பது, பின்னர் தேவைக்காக எடுப்பதை தொழில்அதிபர் வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனை கவனித்த பெண் நைசாக ஒருநாள் சாவியை எடுத்து பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடி விட்டு தலைமறைவாகிவிட்டார்.
இதுபற்றி தொழில் அதிபர் சார்பில் பெங்களூர் பையப்பனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட வேலைக்கார பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார், தலைமறைவாக இருந்த பெண்ணை கைது செய்திருந்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் தொழில்அதிபரின் வீட்டில் திருடிய 157 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.11.50 லட்சம் ஆகும். விசாரணைக்கு பின் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
Gold Price: உச்சானிக் கொம்பில் இருந்து விழுந்த தங்கம்.. பணத்தை ரெடி பண்ணுங்க.. என்ட்ரி பாயின்ட் வருது -
பெங்களூரில் முடங்கும் மெட்ரோ ரயில் சேவை.. ஏப்.,5 ம் தேதி பராமரிப்பு பணி அறிவிப்பு -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
தங்க விலை 16 வருடத்தில் மிக பெரிய சரிவு! அடுத்து என்ன நடக்கும்? முதலீட்டாளர்களுக்கு மேஜர் எச்சரிக்கை -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
வெள்ளி விலை 2 லட்சத்திற்கு கீழ் குறைகிறதா..? நிபுணர்கள் அடித்து சொல்லும் முக்கிய விஷயம்! -
Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு! -
சென்னையில் முடங்கும் ஆட்டோ சேவை? எரிபொருள் இல்லாமல் திணறும் டிரைவர்கள்! பெங்களூரிலும் நிலைமை மோசம் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications