மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!
மேகதாது அணை திட்டம் தொடர்பாக கர்நாடக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அணை கட்டும் திட்டத்தில் இருந்து பின்வாங்காது என்று கர்நாடக முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முதல்வர் விஜய்-யின் பதில் என்ன?
மேகதாது அணை விவகாரம் குறித்துக் கர்நாடகத் முதலமைச்சரான டி.கே.சிவகுமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டிய முழு அதிகாரமும் மத்திய அரசிடம் தான் உள்ளது என்றும், இதில் தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை என்றும் பேசியுள்ளது தற்போது காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

40 ஆண்டு காலத் தமிழ்நாடு எதிர்ப்பு
மேகதாது பகுதியில் அணை கட்டக்கூடாது என்று கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன. தமிழ்நாட்டின் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பாசன ஆதாரமாக விளங்கும் காவிரி நீரின் வரத்தை இந்த அணை முற்றிலும் தடுத்துவிடும் என்பதே தமிழ்நாட்டின் பிரதான கவலையாகும்.
ஆனால், தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தங்களின் சொந்த அரசியல் லாபங்களுக்காக மட்டுமே இந்த மேகதாது அணை விவகாரத்தைக் கையில் எடுத்துத் தொடர்ந்து அரசியல் செய்து வருவதாகவும், மாறாகக் கர்நாடக அரசு தங்களின் மாநில மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து அடுத்தகட்ட வேலைகளைச் சத்தமில்லாமல் செய்து வருவதாகவும் டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசிடம் திட்ட அறிக்கை
மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான இறுதித் திட்ட அறிக்கையை (DPR) கர்நாடக அரசு ஏற்கனவே தயார் செய்து, அதனை மத்திய அரசின் ஒப்புதலுக்காக முறைப்படி அனுப்பி வைத்துள்ளது. இது ஒருபுறமிருக்க, கர்நாடக அரசு தயாரித்த இந்த மேகதாது அணை திட்ட அறிக்கைக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை தற்போது உச்சநீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துவிட்டதாகத் டி.கே.சிவகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பின் மூலம் அணை கட்டுவதற்கான தங்களின் சட்டப்பூர்வ உரிமைகள் மேலும் வலுவடைந்துள்ளதாகக் கர்நாடகத் அரசு நம்புகிறது.
இனி பந்து மத்திய அரசின் கோர்ட்டில்
இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் இனிமேல் இறுதி முடிவெடுக்க வேண்டியது டெல்லியில் உள்ள மத்திய அரசும், மத்திய நீர்வள ஆணையமும் (Central Water Commission) மட்டும்தான் என்று கர்நாடக முதலமைச்சர் டிகே சிவகுமார் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அணைக்கான தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் மட்டுமே உள்ளதால், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை அனைத்தும் மத்திய அரசை நோக்கியே இருக்கும் என்பதை டி.கே.சிவகுமாரின் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
அணை திட்டம் என்ன?
கர்நாடகாவின் ராமநகரம் மாவட்டத்தில் காவிரி மற்றும் அர்காவதி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த அணை அமைய உள்ளது. பெங்களூரு மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கவும், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் இந்தத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பு
தமிழ்நாடு அரசு மற்றும் விவசாயிகள் இந்த அணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அணை கட்டப்பட்டால் காவிரியில் நீர் வரத்து குறைந்து டெல்டா மாவட்ட விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி கர்நாடகா செயல்படுவதாக தமிழ்நாடு குற்றம் சாட்டுகிறது.
தற்போதைய நிலை
தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. கர்நாடக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
தமிழ்நாட்டின் திருச்சி, சேலம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்களில் வாழும் சாமானிய விவசாயிகள் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களின் பிரதான விவசாயப் பாசனத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் மேகதாது விவகாரத்தை ஒரு மிக முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினையாகப் பார்த்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில், கர்நாடக அரசின் இந்தத் தொடர்ச்சியான அதிரடி நகர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திலும், மத்திய அரசிடமும் அடுத்து என்ன மாதிரியான சட்டப் போராட்டங்களை முன்னெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications