ரூ.7.11 கோடி ஏடிஎம் பணம் கொள்ளை.. வருமான வரித்துறையினர் போல் நடித்து பெங்களூரில் துணிகரம்
பெங்களூர்: பெங்களூரில் பட்டப்பகலில் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப எடுத்து செல்லப்பட்ட ரூ.7.11 கோடியை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது? என்பது பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் ஜேபி நகரில் தனியாருக்கு சொந்தமான வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று மாலையில் வங்கியில் இருந்து ரூ.7.11 கோடி பணத்தை எடுத்து கொண்டு தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வேனில் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்ப சென்று கொண்டிருந்தனர்.

இவர்களின் வேன் ஜெயநகர் அசோக் பில்லர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஒரு கார் குறுக்கே வந்து வழிமறித்தது. அந்த காரில் இருந்து இறங்கியவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். அதுமட்டுமின்றி, ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து ஏடிஎம்களில் பணம் நிரப்ப சென்ற ஊழியர், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் மற்றும் டிரைவர் அமைதியாக நின்றனர். அவர்களை தங்களின் காரில் ஏற்றிய கும்பல், பணப்பெட்டியையும் காரில் ஏற்றியது. அதன்பிறகு அவர்களை டெய்ரி சர்க்கிள் அருகே இறக்கிவிட்ட கும்பல் ரூ.7.11 கோடியுடன் எஸ்கேப் ஆகி உள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக பணத்தை கொள்ளையடித்த கும்பல் பன்னரகட்டா ரோட்டின் வழியாக சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் தற்காலிகமாக போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனையை தொடங்கி உள்ளனர். பட்டப்பகலில் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தை சேர்ந்தவர்களை ஏமாற்றி ரூ.7.11 கோடியை தூக்கி சென்ற சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications