ரவா இட்லி டோக்கன் வாங்கி..சாப்பிடாமல் போன நபர்! பெங்களூர் குண்டுவெடிப்பு! ஒருவரை கைது செய்த போலீஸ்
பெங்களூர்: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவரை கைது செய்தது அம்மாநகர போலீஸ். வாடிக்கையாளர்போல் வந்து வெடிகுண்டு வைத்தது யார் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தகவல் வெளியிட்டு உள்ளார். பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில், ஓட்டலுக்கு சாப்பிட வருவது போல வந்த வாடிக்கையாளர் ஒருவர்... தான் கையோடு கொண்டு வந்த பையை ஓட்டலில் வைத்து விட்டு சென்றதாகவும், அவர் விட்டு சென்ற பை ஒன்றில் இருந்த பொருள்தான் வெடித்ததாக முதல் கட்ட புகார்கள் தெரிவிக்கின்றான்.

சிசிடிவியில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 28 முதல் 30 வயதுடையவர் என்று அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் ஓட்டலில் ரவா இட்லிக்கான கூப்பனை எடுத்துக் கொண்டார், ஆனால் சாப்பிடாமல் சென்றுவிட்டார்.
ஐஇடி இருந்ததாகக் கூறப்படும் தனது பையை அவர் விட்டுச் சென்றார் என்று துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். . வெடித்தது மிக வீரியமிக்க IED வெடிகுண்டு என போலீசார் கூறுகின்றனர். தீவிர விசாரணை நடந்து வருகின்றது என்று துணை முதல்வர் டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.. இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் காயமடைந்துள்ளனர்
பையில் இருந்ததைத் தவிர, வளாகத்தில் ஐஇடி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறை முதலமைச்சரிடம் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
குண்டுவெடிப்பு: இந்த நிலையில்தான் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவரை கைது செய்தது அம்மாநகர போலீஸ். வாடிக்கையாளர்போல் வந்து வெடிகுண்டு வைத்தது யார் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே. இந்த உணவகத்தின் ஒயிட் லீட் கிளையானது 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த கஃபேயானது இன்று வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. அப்போது மதிய நேரத்தில் கஃபேயில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
இது பெரிய அளவிலான குண்டுவெடிப்பு அல்ல, இது ஒரு தற்செயலான வெடிகுண்டு. இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன, இது நடக்கக்கூடாது. அது என்னவென்று பார்ப்போம். சமீப காலங்களில், இதுபோன்ற குண்டுவெடிப்புகள் குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் நடந்துள்ளது. . பாஜக ஆட்சியின் போது மங்களூரு பகுதியில் இப்படி நடந்தது. எங்கள் ஆட்சியின் போது இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
இதில் கைதானவர் யார் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற விவரம் வெளியாகவில்லை. குண்டுவெடிப்பில் காயமடைந்த 19 வயது ஓட்டல் ஊழியர் ஃபரூக், அமேசான் ஊழியர் தீபன்சு (23), ஸ்வர்ணாம்பா (49), மோகன் (41), நாகஸ்ரீ (35), மோமி (30), ஆகியோர் காயமடைந்தனர். பலராம் கிருஷ்ணன் (31), நவ்யா (25), ஸ்ரீனிவாஸ் (67) ஆகியோர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications