Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"420 மோசடி பேர்வழிகள்" 400 தொகுதியை வெல்வோம் என்கிறார்கள்! நோ சான்ஸ்! பிரகாஷ் ராஜ் கடும் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 420 (மோசடி) களை செய்தவர்கள் 400 தொகுதிகள் பற்றி பேசுகிறார்கள். ஜனநாயக நாட்டில் தனியாக ஒரு கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பே இல்லை, என்று நடிகர் பிரகாஷ் ராஜ் மறைமுகமாக பாஜகவை விமர்சித்துள்ளார்.

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக மீது எதிர்க்கட்சிகள் சரமாரி விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. அந்த வகையில், பிரபல நடிகர் பிரகாஷ் ராஜும் பாஜகவை கடுமையாக சாடியிருக்கிறார். பாஜகவை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக தனது விமர்சனத்தை முன்வைத்து இருக்கும் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதாவது:-

Parties claiming to win over 400 seats are arrogant Actor Prakash Raj Slams BJP

பிரகாஷ் ராஜ் விமர்சனம்: 420 (மோசடி) களை செய்தவர்கள் 400 தொகுதிகள் பற்றி பேசுகிறார்கள். ஜனநாயக நாட்டில் தனியாக ஒரு கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. மக்கள் கொடுத்தால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும். நாங்கள் இத்தனை சீட்களை கைப்பற்றுவோம் என்று எந்த ஒரு அரசியல் கட்சியும் கூற முடியாது. இப்படி சொல்வது ஆணவத்தனமானது" என்றார்.

பிரகாஷ் ராஜ் எந்த ஒரு அரசியல் கட்சியையும் பெயர் குறிப்பிட்டு விமர்சிக்க வில்லை பாஜகவையே இவ்வாறு மறைமுகமாக தாக்கினார். பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி ராஜ்யசபாவில் குடியரசுதலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசினார். அப்போது மோடி கூறுகையில், " வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.

லோக்சபா தேர்தல்: ஒட்டு மொத்த தேசமும் இதை கூற தொடங்கிவிட்டது. காங்கிரஸ் தலைவர் கார்கே கூட இதைக் கூறியுள்ளார்" என்றார். பிரதமர் மோடி இவ்வாறு பேசிய நிலையில், அவரது பேச்சை விமர்சிக்கும் விதமாகவே பிரகாஷ் ராஜ் மேற்கூறியவாறு கடுமையாக விமர்சித்து இருக்கிறார். லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி முதல் ஜூன் 01 ஆம் தேதி வரை 7 கட்டங்களக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 04 ஆம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மத்தியில் கடந்த 2014 முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக, வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது.

மோடி பிரசாரம்: பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. பாஜக மட்டும் 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற வியூகத்துடன் பாஜக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மறுபக்கம், பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற திட்டத்துடன் இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ்குமார், கூட்டணியில் இருந்து வெளியே பாஜக கூட்டணியில் ஐக்கியமானார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+