5 அறைகள், சமையலர், கணக்கில்லாத பார்வையாளர்கள்... சிறையில் சசிகலா நடத்திய தனி ராஜாங்கம்
A RTI query by activist N. Murthy reveals that Sasikala has been given VIP facilities such as personal cook, unrestricted access to visitors.
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு 5 அறைகள், தனி சமையலர், கணக்கில்லாத பார்வையாளர்கள் சந்திப்பு என வாழ்ந்து வந்ததாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர் என் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதை அடுத்து கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக சிறைத் துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியிருந்தார். அது போல் அவர் ஷாப்பிங் சென்றுவிட்டு வெளியே சிறைக்குள் வந்த வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

விசாரணைக்கு உத்தரவு
இது தொடர்பாக கர்நாடக அரசு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனிடையே சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அதன் ஆர்வலர் என் மூர்த்தி தகவல் கோரியிருந்தார்.

4 அறைகளில்
அவருக்கு கிடைத்த தகவல் குறித்து அவர் கூறுகையில் சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் 5 அறைகளை ஒதுக்கியிருந்தனர். அவருக்கு ஒரு அறை மட்டுமே ஒதுக்கப்பட்டது. எனினும் மேலும் 4 அறைகளை சிறைத் துறையினர் ஒதுக்கி உள்ளனர். அந்த 4 அறைகளில் தங்கியிருந்த பிற பெண் கைதிகள் சசிகலா வந்தவுடன் மற்ற கைதிகளுடன் நெருக்கடியில் தங்க வைக்கப்பட்டனர்.

மணிக்கணக்கில்
சிறையில் சமையல் செய்யலாம் என்ற சட்ட திட்டங்கள் ஏதும் இல்லாத நிலையில் அஜந்தா என்ற பெண் கைதி ஒருவரை சசிகலாவுக்கு சமையல் செய்ய சிறை துறை அதிகாரிகள் நியமனம் செய்துள்ளனர். சில நேரங்களில் கும்பல் கும்பலாக வருவோர் நேராக சசிகலா அறைக்கு சென்று அங்கு மணிக்கணக்கில் பேசியிருந்துள்ளனர் என்று தகவல்களை மூர்த்தி வெளியிட்டுள்ளார்.

ரூபா புகார்
இவை அனைத்தையும் சிறைத் துறை டிஐஜி ரூபா கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 13- ஆம் தேதி முதல் முறையாக வெளிக் கொண்டு வந்தார். மேலும் சசிகலா இத்தகைய சலுகைகளை அனுபவிக்க ரூ 2 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications