டீசல் திருட்டு கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்ட காவலர்... சுட்டுப்பிடித்த போலீசார்.. பரபரப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் காவலர் கையை வெட்டிய டீசல் திருடிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் நாடு முழுவதும் வாகனங்களில் எரிபொருள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அப்படி ஒரு டீசல் திருடும் கும்பல்தான் ஓசூர் அருகே கர்நாடக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசாரை வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்று சிக்கி இருக்கிறது.

தொடரும் டீசல் திருட்டு
கர்நாடகாவின் ஜிகினி நகரம் தமிழ்நாட்டின் ஓசூருக்கு மிக அருகாமையில் உள்ளது. அங்குள்ள கே.இ.பி சந்திப்பு பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் சரக்கு லாரிகளில் டீசல் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்துள்ளன. இது தொடர்பாக ஜிகினி காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்துள்ளன.

இரவு நேர ரோந்தில் பிடிபட்ட கும்பல்
இதனை தடுக்க ஜிகினி காவல் நிலைய ஆய்வாளர் சுதர்சன் தலைமையிலான போலீசார் கே.இ.பி. சந்திப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு நேரம் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது ஒரு டீசல் திருட்டு கும்பல் சாலையோரத்தில் நின்றிருந்த லாரிகளில் டீசல் எடுத்துக் கொண்டிருந்ததை கண்ட கர்நாடக போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றுள்ளனர்.

வெட்டுப்பட்ட காவலர்; சுடப்பட்ட திருடன்
இதை சற்றும் எதிர்பார்க்காத டீசல் திருட்டு கும்பலை சேர்ந்த கோடேஷ், ஒரு காவலரை ஆயுதங்களால் தாக்கியது. இதில் காவலரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. உஷாரான காவல் நிலைய ஆய்வாளர் சுதர்சன் தனது துப்பாக்கியால் திருட்டு கும்பலை நோக்கி சுட்டதில் திருட்டு கும்பலை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்ற ராஜுவுக்கு இடது காலில் குண்டு பாய்ந்து. படுகாயமடைந்த ஸ்ரீநிவாஸ் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

இருவரிடம் விசாரணை
படுகாயமடைந்த அவரை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். திருட்டு கும்பல் தாக்கி கையில் வெட்டுப்பட்ட காவலரையும் போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். பிடிபட்ட ஸ்ரீநிவாசனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு முக்கியத் தகவல்களை அளித்து உள்ளார். அதன் பேரில் டீசல் திருட்டு கும்பலை சேர்ந்த மல்லன கவுடா என்பவரை ஜிகினி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டீசல் கேன்கள் பறிமுதல்
தலைமறைவான டீசல் திருட்டு கும்பலை சேர்ந்த மேலும் இருவரை தேடும் பணியில் கர்நாடக மாநில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் டீசல் நிரப்பிய ஏராளமான கேன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications