திருவனந்தபுரத்தில் திடீர் திருப்பம்.. சசிதரூர் முன்னிலை.. பாஜக வேட்பாளருக்கு பின்னடைவு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    lok sabha election results 2019 : கேரளா மற்றும் கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நிலவரம்

    பெங்களூர்: பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பிரகாஷ் ராஜும், திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூரும் பின்னடைவை சந்தித்த நிலையில், அடுத்த சுற்றில் சசி தரூர் முன்னிலை பெறத் தொடங்கியுள்ளார்.

    விஐபி வேட்பாளர்களாக பார்க்கப்படுபவர்கள் இருவருமே. தங்களது தொகுதிகளில் ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையின்போது இருவரும் பின்னடைவை சந்தித்தனர்.

    Prakash Raj, and Shashi Tharoor Trailing

    திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர் களமிறங்கியுள்ளார். அவர், ஏற்கனவே சிட்டிங் எம்.பி.யுமாவார். அவருக்கு பிரதான போட்டி பாஜக வேட்பாளர், கும்மனம் ராஜேசேகரனுடன்தான். இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியதுமே, கும்மனம் ராஜேசேகரன் முன்னிலைபெறத் தொடங்கினார். சபரிமலை விவகாரம், பாஜகவுக்கு தலைநகர் திருவனந்தபுரத்தில் கைகொடுக்க தொடங்கியதாக அக்கட்சியினர் நினைத்தனர். ஆனால் அடுத்த ரவுண்டில் சசி தரூர் முன்னிலை பெற்றுள்ளார். எனவே அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

    இதேபோல, பெங்களூர் மத்திய தொகுதியில் மோடி எதிர்ப்பாளர் என்ற தீவிர அறிமுகத்தோடு களம் கண்டவர் பிரகாஷ் ராஜ். இவருக்கு பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டி இருந்தது. பாஜக சார்பில் அங்கு சிட்டிங் எம்.பி. மோகனும், காங்கிரஸ் சார்பில் அர்ஷத் ரிஸ்வானும் களம் கண்டனர். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த தொகுதியில், பிரகாஷ் ராஜுக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+