நீர்மூழ்கி கப்பலில் பயணம்.. வரலாறு படைத்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
டெல்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நீர்மூழ்கி கப்பலில் பயணித்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்னர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நீர்மூழ்கி கப்பலில் பயணித்திருந்தார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வாக்ஷீர் நீர்மூழ்கி கப்பலில் திரௌபதி முர்மு பயணித்திருக்கிறார். கர்நாடகாவின் கார்வார் கடற்படை தளத்திலிருந்து முர்மு பயணித்திருக்கிறார். இந்த பயணம் மூலம், நீர்மூழ்கி கப்பலில் பயணித்த இரண்டாவது குடியரசுத் தலைவர் என்கிற பெருமையை முர்மு பெற்றிருக்கிறார்.

முர்முவின் பயணத்தில், குடியரசுத் தலைவர் முர்முவுடன் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதியும் பயணித்திருக்கிறார். கார்வார் கடற்படைத் தளத்தில், கடற்படை சீருடையில் வந்த திரௌபதி முர்மு, நீர்மூழ்கிக் கப்பலுக்குள் நுழையும் முன் அங்கிருந்த கடற்படை வீரர்களைப் பார்த்து கையசைத்தார். குடியரசுத் தலைவர் செயலகம் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவுகளிலும் இது தொடர்பான புகைப்படம் பதிவேற்றப்பட்டிருக்கிறது.
ஐஎன்எஸ் வாகீர், உள்நாட்டுத் தயாரிப்பான கல்வாரி வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலாகும். ப்ராஜெக்ட்-75 ஸ்கார்பீன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆறாவது மற்றும் இறுதி கப்பலான இது, கடந்த ஜனவரியில் (2025) கடற்படையில் இணைக்கப்பட்டது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் மேம்பட்ட சோனார் உபகரணங்களுடன் இந்த கப்பல், இந்தியாவின் கடற்படை பலத்தை அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications