துருக்கி மக்களுக்கு துணையாக 140 கோடி பேர் இருக்கின்றனர்.. உதவ இந்தியா தயார்! பிரதமர் மோடி அறிவிப்பு
துருக்கியில் ரிக்டர் அளவில் 7.8 என உருவான நிலநடுக்கம், சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் எகிப்து வரையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் துருக்கிக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

'எரிசக்தி வாரம்' மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "துருக்கியில் ஏற்பட்ட அபாயகரமான நிகழ்வை நாம் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதைவிட அதிகமாக பொருட் சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது.
துருக்கிக்கு அருகில் உள்ள நாடுகள் கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலநடுக்கத்தில் உயிர்களையும், உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இம்மக்களுக்கு 140 கோடி இந்தியர்களும் உறுதுணையாக உள்ளோம்" என்று கூறியுள்ளார். மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications