காங்கிரஸை முந்தும் பாஜக.. ஜேடிஎஸ் ஆதரவு கொடுக்கும் கட்சி ஆட்சியில் அமரும்.. ராஜ்நீதி கணிப்பு!
பெங்களூர் : கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. ராஜ்நீதி கருத்துக்கணிப்பின்படி பாஜக 100 இடங்களையும், காங்கிரஸ் 92 இடங்களையும், ஜேடிஎஸ் 31 இடங்களையும், மற்றவை 1 இடத்தையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி உள்ளது.

மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் ஜன் கி பாத், மேட்ரைஸ், ராஜ்நீதி ஆகிய நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளன.
ராஜ்நீதி வெளியிட்டுள்ள தேர்தலுலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, பாஜக 100 இடங்களையும், காங்கிரஸ் 92 இடங்களையும், ஜேடிஎஸ் 31 இடங்களையும், மற்றவை 1 இடத்தையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை பார்க்கும்போது எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்றே தெரிகிறது. ஆட்சியமைப்பதில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், ஜேடிஎஸ் உடன் கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications